முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்ணச்சநல்லூரில் பொங்கல் பரிசு : பரமேஸ்வரிமுருகன் எம்எல்ஏ வழங்கினார்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் எம்எல்ஏ பரமேஸ்வரிமுருகன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.

 

தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கலை முன்னிட்டு பச்சரிசி, கரும்பு, முந்திரி, திராட்சை, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்படி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழா இந்திராநகர் மற்றும் லட்சுமி நகர் நியாய விலை கடைகளில் நடைபெற்றது.

 

வட்டாட்சியர் கணேசன் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் முருகன் வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். எம்எல்ஏ பரமேஸ்வரிமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி பேசினார். விழாவில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், நகர செயலாளர் துரை.சக்திவேல், எம்ஜிஆர் மன்றம் சின்னையன், முன்னாள் கவுன்சிலர்கள் மோகன், எம்ஆர்வி.பாஸ்கர், சடையன், சரோஜாஅர்ச்சுணன், பொன்னம்பலம், துரைராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் சாந்தா, கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்