எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு பயணிகள் செல்ல சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ் சேவை இயக்கம் தொடங்கியது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு தமிழக அரசு சிறப்பு பஸ்களை இயக்குகிறது. சிறப்பு பேருந்துகள் நேற்று (புதன்கிழமை) முதல் 13-ந்தேதி வரை இயக்கப்படுகிறது. வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக 15, 16, 17 ஆகிய நாட்களிலும் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது.
சென்னையில் 5 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பேருந்துகள் செல்ல வசதியாக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பஸ்களில் செல்லக் கூடியவர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள். நேற்று வரை ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதில் சென்னையில் இருந்து 70 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள். நேற்று 9 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்து இருக்கிறார்கள். பொங்கல் சிறப்பு பஸ் நேற்று முதல் இயக்கப்படுகிறது. வழக்கமாக செல்லக்கூடிய 2,275 பஸ்களும் கூடுதலாக 794 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்கள் காலை 10 மணி முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 5 பஸ் நிலையங்களில் இருந்து புறப்பட்டு சென்றன. செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு செல்லக்கூடிய பஸ்கள் அண்ணாநகர் மேற்கு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன. முன்பதிவு செய்த பயணிகள் அங்கு சென்று ஏறினார்கள்.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லக்கூடிய பஸ்கள் அடையாறு காந்தி நகரில் உள்ள மாநகர பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறது. பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
தாம்பரம் சான்டோரியம் பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் புறப்பட்டு செல்கின்றன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்களும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், கோவை ஆகிய நகரங்களுக்கு இங்கிருந்து சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன.தாம்பரம், பெருங்களத்தூர் பஸ் நிலையங்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு ஊரப்பாக்கத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்கள் அந்தந்த பஸ் நிலையங்களுக்கு காலையில் அனுப்பப்பட்டு அங்கிருந்து பயணிகளை ஏற்றிச் சென்றது. பொங்கல் கொண்டாடுபவர்கள் பெரும்பாலும் கடைசி நேர பயணத்தையே மேற்கொள்வார்கள். அதனால் 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இன்று (வியாழக்கிழமை) 1779 சிறப்பு பஸ்களும் நாளை 1872 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது. முன்பதிவு செய்த பயணிகள் தாங்கள் பயணம் செய்ய வேண்டிய பஸ் நிலையத்திற்கு பஸ் புறப்படுவதற்கு முன்பே செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கோயம்பேடு பஸ் நிலையத்தின் பின்புறம் தற்காலிக நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. 7,8,9 ஆகிய தற்காலிக நடைமேடையில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணம் செய்யலாம். திருச்சி, மதுரை, சேலம் போன்ற ஊர்களுக்கு அங்கிருந்து சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்லும். இதுதவிர 1, 2 நடைமேடைகளும் முன்பதிவு இல்லாத பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 3, 4, 5, ஆகிய நடைமேடைகளில் முன்பதிவு செய்த பயணிகள் பயணம் செய்ய பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.