முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது : மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி பேட்டி

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      நாகப்பட்டினம்

வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது:

 

பருவமழை பெய்யததாலும், ஆற்றில் தண்ணீர் வராததாலும் விவசாயம், மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது களசூழ்நிலைகளை புரிந்து கொண்டு முதல்வர் பன்னீர்செல்வம் தமிகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர்

நிலவரியை ரத்து செய்திருப்பதும், இழப்பீட்டுக்கு ஏற்ப நிவாரணம் அறிவித்திருப்பது வரவேற்கதக்கது உயிரிழந்த விவசாயிகளுக்கு தலா ரூ 3 லட்சம் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது வறட்சி நிலவும் தமிழகத்தில் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்பதை அதிமுக அறிவிக்கும் என தமீமுன் அன்சாரி; நம்பிக்கை தெரிவித்துள்ளார் இந்த பேட்டியின் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்