முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசமான உணவு குறித்த எல்லை பாதுகாப்பு படை வீரர் புகார் குறித்து தொடரப்பட்ட வழக்கில் டெல்லி ஐகோர்ட்டில் 16-ம் தேதி விசாரணை

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு மோசமான உணவு வழங்கப்படுவதாக டெல்லி ஐகோர்ட்டில் வரும் 16-ம் தேதி விசாரணை நடைபெறுகிறது.

வீரர் புகார்
எல்லைப் பாதுகாப்பு படையில் மிக மோசமான உணவு வழங்கப்படுவதாகவும், சில நேரங்களில் வெறும் வயிற்றோடு படுக்கச் செல்வதாகவும் 29-வது பட்டாலியனை சேர்ந்த தேத் பதூர் யாதவ் என்ற அந்த வீரர் குற்றம்சாட்டி இருந்தார். மேலும் அவர் தங்களுக்கு வழங்கப்படும் மூன்று வேளை உணவுகளையும் அந்த வீடியோவில் ஒவ்வொன்றாக காட்டி விளக்கினார். இது மிகவும் உருக்கமாக இருந்தது.

மற்றொரு புகார்
படை வீரர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக வழங்கப்படும் பொருட்களை உயர் அதிகாரிகள் ஏமாற்றி வெளிச்சந்தையில் விற்பனை செய்வதாக மற்றொரு எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இதேபோன்ற மற்றொரு வீடியோவும் எல்லைப்பகுதியில் நமது தாய்நாட்டை பாதுகாக்க கடமையாற்றும் வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை சுட்டிக்காட்டும் வகையில் அமைந்திருந்தது.

16-ம் தேதி விசாரணை
இந்நிலையில், அந்த வீரரின் குற்றச்சாட்டை சுட்டிக்காட்டி டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கில் வரும் 16-ம் தேதி விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்