எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த திட்டத்தில், சிறப்பு சிகிச்சைகளுக்கு அளிக்கப்படும் காப்பீட்டுத்தொகை ரூ.1.50 லட்சத்திலிருந்து, 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீட்டு திட்டம்
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையில், தமிழ்நாடு அரசு, மக்கள் நல்வாழ்வுத் துறையில், ஏழை எளிய மக்களுக்காக என்னற்ற நலவாழ்வு திட்டங்களை செயல்படுத்தி, இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. ஏழை எளிய மக்களுக்கு நவீன மருத்துவ வசதிகள் வழங்கப்படவேண்டும் என்பதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டு, சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு மருத்துவ காப்பீட்டு அடையான அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
பல லட்சம் பேருக்கு சிகிச்சை
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் காப்பீடும், குறிப்பிட்ட 77 நோய் வகைகளுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரையிலும் காப்பீடு வழங்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்தில் 17.60 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் 3,615 கோடி ரூபாய் காப்பீட்டு செலவில் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டு, 7.11 லட்சம் பயனாளிகளுக்கு 1,286 கோடி ரூபாய் காப்பீட்டு செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அறுவை சிகிச்சை
இத்திட்டத்தில் பெற்ற நிதியிலிருந்து, அரசு மருத்துவமனைகளுக்கு நவீன உபகரணங்கள் புதிய கட்டிடங்கள் மற்றும் பிற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அதிநவீன உயர் சிறப்பு சிகிச்சைகளான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, காது வால் உள்வைப்பு அறுவை சிகிச்சை மற்றும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில், மாநில அரசின் பங்களிப்பு 35 கோடி ரூபாயுடன் தொகுப்பு நிதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நபர்கள் எவ்வித செலவும் செய்யவேண்டியதில்லை. இதுவரை 4,300 நபர்கள், 318.42 கோடி ரூபாய் செலவில் சிறப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டு பயனடைந்துள்ளனர்.
மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த திட்டத்திற்கு காப்பீட்டு நிறுவனத்துடனான உடன்படிக்கை 10-ம்தேதியுடன் முடிவடைகிறது. ஆளுநர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 16.06.2016 அன்று நிகழ்த்திய உரையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு இணங்க, இதற்கான அரசாணை 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த திறந்த ஒப்பந்தப் புள்ளி மூலம் அரசு சார்ந்த காப்பீட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதற்காக ஒப்பந்தப் புள்ளிகளை வரவேற்று நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒப்பந்தப் புள்ளி இறுதி செய்வதற்கான அனைத்து வழிமுறைகளும் பின்பற்றப்பட்டு, ஒரு குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு மிகக் குறைந்த பிரிமியம் 699 ரூபாய் என்று குறிப்பிட்ட யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம், தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை 10-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டு நிறுவனம், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தை 11ம் தேதி முதல் நான்கு ஆண்டுகளுக்கு செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக ஆண்டு ஒன்றுக்கு 1,270 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
312 சிகிச்சை முறைகள்
11-ம் தேதி முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், சிறப்பு சிகிச்சை முறைகளுக்கு தற்போது வழங்கப்படும் 1.50 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் 312 சிகிச்சை முறைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் முதல் முறையாக, தமிழ்நாட்டில் குடியேறி ஆறு மாதத்திற்குமேல் வசிக்கும் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட புலம் பெயர்ந்தவர்கள் முறையான அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்டு தொழிலாளர் நலத் துறை மூலம் சேர்க்கப்படுவார்கள். மாநில அரசால் அனாதைகள் என வரையறுக்கப்பட்டவர்களுக்கு, ஒவ்வொரு நபருக்கும் தனி காப்பீட்டு அட்டை வழங்கப்படும். தற்போதைய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை முறை தொடரப்படும். மேலும் மின்னனு முறையில் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்து அச்சடித்துக் கொள்வதற்கான வழிமுறைகளும் இதில் உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் மையங்கள் தொடர்ந்து செயல்படும். தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனம் உடன் இணைந்து பயனாளிகள் ஆதார் எண்ணுடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
தொடர்ந்து சிகிச்சை பெறலாம்
பயனாளிகள், தற்போதுள்ள திட்டத்தில் உள்ளது போலவே இத்திட்டத்திலும் தொடர்ந்து காப்பீட்டு அடையாள அட்டை மற்றும் மின்னனு அட்டை உபயோகித்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தைப் பற்றி அறிந்துகொள்ளவும், சிகிச்சை பெறுவதில் வழிகாட்டுதலுக்கும், சிகிச்சை பெறுவதில் உள்ள சிரமங்களை சரி செய்யவும் மற்றும் புகார்களுக்கும், 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3993 தொடர்பு கொள்ளலாம். தேவையிருப்பின், மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் உள்ள மாவட்ட கண்காணிப்பு மற்றும் குறை தீர்த்தல் செயற்குழுவிடம் புகார் தெரிவிக்கலாம். செயற்குழு முடிவின் மீது மேல் முறையீடு ஏதும் இருப்பின், தமிழ்நாடு அரசு சுகாதாரத் திட்ட, திட்ட இயக்குநர் தலைமையில் உள்ள மாநில கண்காணிப்பு மற்றும் குறைதீர்த்தல் செயற்குழுவிடம் மேல் முறையீடு செய்யலாம்.
பொதுமக்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் எந்த செலவுமின்றி, கட்டணமில்லாமல் உயர்தர மருத்துவ சிகிச்சை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
வயநாடு தொகுதிக்கு ராகுல் செய்தது என்ன? பிரசாரத்தில் அண்ணாமலை கேள்வி
24 Apr 2024திருவனந்தபுரம், வயநாடு தொகுதிக்கு என்ன செய்தேன் என ராகுல் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா? என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024