முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் பொதுமக்கள் தொடர்ந்து கண்ணீர் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழக மக்கள் மற்றும் உலகெலாம் பரவி வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவருமான, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.கவினரும், பொதுமக்களும் தொடர்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மக்களின் நலனுக்காக  வாழ்ந்தவர் :

தமிழக மக்களுக்காகவே தம்மை அர்ப்பணித்து, தவவாழ்வு வாழ்ந்து, கோடானுகோடி மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்து நிற்கும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக, சென்னை மெரினா கடற்கரையில், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்த வண்ணம் உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் பொதுமக்கள் மற்றும் கழகத் தொண்டர்கள், மாணவ-மாணவியர் உள்ளிட்டபெருந்திரளானோர் தொடர்ந்து, அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏழை-எளிய மக்களின் நலனுக்காக மறைந்த   முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்திய எண்ணற்றத் திட்டங்களை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்