முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த்ரிஷா படப்பிடிப்பில் அவமரியாதை: தென்னிந்திய நடிகர் சங்கம் வேதனை

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜனவரி 2017      சினிமா
Image Unavailable

சென்னை : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தென்னிந்திய நடிகர் சங்கம், சில நடிகர் - நடிகையிடம் படப்பிடிப்பில் சிலர் எல்லை மீறி அவமரியாதை செய்தது வருந்தத்தக்கது என்று கவலை வெளியிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு தடை  விதிக்கப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களையும் விவாதங்களையும் தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகின் பல பிரபலங்களும் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்கள்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம். அந்த அறிக்கையில், "இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழியினருக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் அடையாளம் இருக்கிறது. இதையெல்லாம் அழியாமல் காக்கப்பட வேண்டும் என்பதில் தென்னிந்திய நடிகர் சங்கம் முழுமையாக நம்புகிறது.

அந்த வகையில் சிந்துவெளி நாகரிகம் கல்வெட்டில் இருந்து இன்றுவரை ஏறு தழுவுதல் என்கின்ற ஜல்லிக்கட்டு தமிழர்களின் தொன்மை அடையாளமாய் இருந்து வருகின்றது. சட்டத்திற்கு முன் ஜல்லிக்கட்டு பற்றி வேறு பார்வை இருக்கின்றது, ஆனால் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட பிரிதிநிதிகள் இதைச் சட்டத்திற்கு புரியவைத்து நம்மொழி சார்ந்த கலாச்சாரங்களை வாழவைப்பது அவர்களுடைய கடமையாகிறது.

கடவுள், மதம், வாழ்கை, பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் இப்படி எல்லாவற்றுக்கும் தன் தனிப்பட்ட கருத்தை பதிவு செய்ய நம் அனைவருக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உரிமை வழங்கியுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் தனது கருத்தை பதிவுசெய்த சில நடிகர், நடிகையிடம் படப்பிடிப்பில் சிலர் எல்லை மீறி அவமரியாதை செய்தது வருந்தத்தக்கது.

கமல்ஹாசன் கருத்து :

இந்த நேரத்தில் நம் கலைஞன் கமல்ஹாசன் தனது வலைபக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவை இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. அதில் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்பவர்களை எல்லை மீறாமால் விமர்சிக்க வேண்டியதும், அதுவும் பெண்ணாக இருந்தால் கொச்சைப்படுத்தாமல் பதில் விமர்சனம் செய்வதும் கூட தமிழர் மரபு தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

தமிழர்களின் மரபு சார்ந்த ஏறு தழுவல் அவர்களின் உணர்வுகளையும், உள் எழுச்சிகளையும் புரிந்துக்கொண்டு அது எல்லை மீறுவதற்க்கு முன் மத்திய அரசு அவசர சட்டம் ஏற்றியேனும், இந்த வருடம் ஏர்தழுவலை நடத்தி கொடுக்க வேண்டும், என நாங்கள் வேண்டுகிறோம். இதுவே தமிழக மக்களுக்கு தரும் பொங்கல் பரிசாக இருக்கும் என்றும் நம்புகிறோம், அதற்காக காத்திருக்கிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு தடைக்கு சட்ட ரீதியில் நீதிமன்றத்தை அணுகுவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் முக்கியப் பின்ன ணியில் இருப்பது 'பீட்டா' அமைப்பு. அதன் நல்லெண்ணத் தூதராக உள்ள நடிகை த்ரிஷாவின் நிலைப்பாடு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. மேலும், சிவகங்கையில் நடைபெற்று வந்த அவரது 'கர்ஜனை' படப்பிடிப்பில் போராட்டம் நடத்தப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்