எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புனே : டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் விராட் கோலி ஸ்திரமடைவதற்காக காத்திருந்ததாக தனது கேப்டன்சி விலகல் பற்றி எம்.எஸ் டோனி கூறியுள்ளார்.
புனேயில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டோனி கூறியதாவது:
ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி என ஒவ்வொரு போட்டிக்கும் தனி தனி கேப்டன்கள் இருப்பது இந்திய அணிக்கு ஒத்து வராது, எனவேதான் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதில் இருந்து விலகினேன்.
எதிர்பார்த்தேன்
நான் சரியான தருணத்திற்காக காத்திருந்தேன். டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சவுகரியமான ஒரு ஸ்திர நிலையை எட்டட்டும் என்று காத்திருந்தேன். தற்போது அவர் ஒரு நாள், டெஸ்ட்போட்டி என அனைத்து போட்டிகளுக்கும் கேப்டன் பொறுப்பேற்க தயாராகிவிட்டார். இதனால் பதவி விலகல் குறித்து முடிவெடுத்தேன். இதில் தவறில்லை, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவுதான் இது. இதுதான் தருணம் என்று நான் உணர்ந்தேன்.
இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்று விராட் கோலிக்கு வழிவிடவேண்டும் என்று முடிவெடுத்தேன். சாம்பியன்ஸ் டிராபி வரை நான் கேப்டனாக நீடித்திருந்தால் மாற்றங்கள் ஏற்பட்டிருக்காது.
திடீர் விலகல் ஏன்?
ஆஸ்திரேலியாவில் பாதி தொடரிலேயே நான் ஏன் ஓய்வு அறிவிக்க வேண்டும் என்று பலரும் நினைக்கலாம், ஆனால் நாம் பெரிய புலத்தை யோசிக்க வேண்டும். எது அணிக்குப் பயனளிக்கும் என்பதை யோசிக்க வேண்டும். இன்னொரு போட்டி என்ற எனது எண்ணிக்கையால் பெரிய வித்தியாசம் ஒன்றும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.
சஹா ஆஸ்திரேலியாவில் இருந்தார், அவர் ஆஸ்திரேலியாவில் இன்னொரு டெஸ்ட் விளையாட வாய்ப்பளிக்க வேண்டும். எனவே அனைத்தும் நன்றாகச் சென்றால் அயல்நாட்டு தொடர்களுக்கு டெஸ்ட் போட்டிகளுக்கு அவர்தான் விக்கெட் கீப்பராகச் செல்லப் போகிறார். அவருக்கு அதற்கு ஆஸ்திரேலியாவில் அனுபவம் பெற வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும், அதே போல் விராட் கோலிக்கும்தான்.
துணை கேப்டன்
அணியில் விக்கெட் கீப்பர்தான் அறிவிக்கப்படாத துணை கேப்டன், களவியூகம் அமைப்பது துணைக் கேப்டன் அல்லது விக்கெட் கீப்பரிடம் வழக்கமாக அளிக்கப்படுவதுதான். இந்த இடத்தில் இனி எனது பணி என்னவெனில் கேப்டன் என்ன விரும்புகிறார் என்பதை நான் நெருக்கமாக கவனிக்க வேண்டும். அவருக்கு தேவையான களவியூகம் என்னவென்பதையும் கவனிக்க வேண்டும்.
நான் விராட் கோலியிடம் இது குறித்து ஏற்கெனவே பேசியுள்ளேன், களவியூகம் எப்படி அமையவேண்டும், பீல்டர்களை எங்கு நிறுத்த வேண்டுமென்று அவர் விரும்புகிறார் என்பதை கலந்தாலோசித்துள்ளேன். உதாரணமாகச் சொல்ல வேண்டுமெனில் தேர்ட் மேன் நிலையை அவர் எப்படி விரும்புகிறார். ஷார்ட் தேர்ட் மேனா? கொஞ்சம் வைடாக வேண்டுமா? என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்ராயம் இருக்கும். என்னைப்பொறுத்தவரையில் ஷார்ட் தேர்ட் மேன், அல்லது ஷார்ட் பைன் லெக் எனக்கு சற்று அருகில் இருக்க வேண்டும் அதுதான் பேட்ஸ்மெனுக்கு கடினமாக இருக்கும் என்று நினைப்பேன். இதற்கெல்லாம் நான் மாற்றிக்கொள்ள வேண்டும், ஆனால் ஒட்டுமொத்தமாக பெரிய மாற்றங்கள் இருக்காது.
அறிவுரை தருவேன்
தேவைப்படும்போது, விராட் கோலிக்கு என்னால் முடிந்த அறிவுரைகளை வழங்குவேன். களவியூகமே நான் அதிகம் கவனம் செலுத்தும் இடம். நான் கோலியுடன் ஆலோசனை செய்ய வேண்டும், நான் இந்த இடத்தில்தான் இருக்க வேண்டும் அதுதான் உத்தி ரீதியாக சரியானது என்று அவர் நினைக்கும் போது நான் என் இஷ்டப்படி நகர்ந்து கொண்டிருக்கக் கூடாது, ஆனால் இதெல்லாம் பெரிய விஷயமில்லை. எப்படியிருந்தாலும் சில ஆட்டங்களுக்கு களவியூகம் மீது என் கவனம் இருக்கும்.
ஒரு வீரரின் திறமை என்னவாக இருந்தாலும் அதனை 100% பயன்படுத்திக் கொள்வதுதான் எனது கேப்டன்சி அணுகுமுறை. 90% முதல் 110% வரை சாதித்தால் உண்மையில் நன்றாக ஆடுவதாகவே அர்த்தம்.
நல்ல முடிவு
80% திறமை உள்ள வீரரிடமிருந்து 150% ஆட்டத்திறனை நாம் எதிர்பார்க்க முடியாது. இங்குதான் நடைமுறை ரீதியாக நாம் சிந்திக்க வேண்டும், நேர்மையாக சிந்திக்க வேண்டும். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக கையாள வேண்டும், சிலருக்கு ஓரிரு வார்த்தைகளே போதும் சிலருக்கு கடுமையான வார்த்தைகள் தேவைப்படும். சிலருக்கு பார்வை ஒன்றே போதும். ஒரு தருணத்தில் ஒருவருக்கு என்ன தேவை என்பதை புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.
அணியின் திறன் என்னவென்பதை அறிந்திருந்தால் அவர்கள் தங்கள் திறனுக்கேற்ப ஆடுவதை உறுதி செய்ய முடியும். சில வேளைகளில் பிரச்சினை ஏற்படும், 2-3 பேட்ஸ்மென்கள் ரன்கள் எடுக்காமல் இருப்பார்கள், கஷ்டப்படுவார்கள். இது ஒரு பெரிய தடைதான். ஆனால் நாம் பெரிய தொடர்களை கருத்தில் கொள்ள வேண்டும், ஐசிசி உலகக்கோப்பை போன்ற தொடர்களில் நாக்-அவுட் சுற்றில் யார் அணியை வெற்றிக்கு இட்டுச் செல்வார்கள் என்பதை கண்டறிய வேண்டும். ஆனால் முடிவில் ஒரு தனிப்பட்ட வீரருக்கு சில ஆட்டங்களே அளிக்க முடியும். ஒட்டுமொத்தமாக இதைத் தவிர ஒன்றும் செய்ய முடியாது, இதற்குமே வீர்ர்கள் மீது நம்பிக்கை வைப்பது அவசியம்.
இளம் வீரர்கள்
நான் கேப்டன்சி ஏற்றபோது அணியில் நிறைய மூத்த வீரர்கள். ஆனால் அவர்கள் ஒருகட்டத்தில் ஓய்வு பெற வேண்டி வந்தது. எனவே மாறும் அணியை இயல்பாக்குவது முதல் கடமை. ஒரு நல்ல விஷயம் என்னவெனில், மூத்த வீரர்கள் போன பிறகு அணிக்கு வந்த இளம் வீரர்கள் தற்போது சிறப்பாக ஆடிவருகின்றனர் என்பதே..
நாம் அவர்களில் முதலீடு செய்துள்ளோம், இவர்கள்தான் இந்திய கிரிக்கெட் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள். இதைப் பார்ப்பதற்கு திருப்தியாக உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தப் பயணத்தை நான் நேசித்தேன். இந்த திருப்திதான், அது வெற்றிகாலங்களாக இருந்தாலும் தோல்வி காலங்களாக இருந்தாலும், நம் முகத்தில் புன்னகையை வரவழைப்பது. பயணம் என்பதே முக்கியம். எனது பயணம் தொடருகிறது. இவ்வாறு டோனி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.