முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 மாணவிகளை கற்பழித்த காமுகன் டெல்லியில் கைது

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - 14 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மாணவிகளை கற்பழித்த டெய்லரை டெல்லியில் போலீசார் கைது செய்துள்ளனர்.

காமகொடூரன்
டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி சில ஆண்டுகளுக்கு முன் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாடே அதிர்ச்சியுறும் வகையில் நூற்றுக்கணக்கான மாணவிகளை காமுகன் ஒருவன் கற்பழித்த தகவல் வெளியாகியுள்ளது.

டெய்லர் வேலை
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்தவன் சுனில் ரஸ்தோகி. டெல்லியில் வசித்து வருகிறான். இவனுக்கு தற்போது 38 வயதாகிறது. திருமணமாகி மனைவியும், 3 மகள்கள், 2 மகன்களும் உள்ளனர். இவன் 12 வயதிலேயே 1990-ம் ஆண்டு டெல்லிக்கு பிழைப்பு தேடி வந்தான். டெய்லர்களிடம் உதவியாளராக வேலைக்கு சேர்ந்து பின்னர் சொந்தமாக டெய்லர் தொழில் செய்து வந்தான்.

சிறுமிகளை...
சிறு வயதிலேயே இவன் காம கொடூரனாக இருந்து வந்துள்ளான். டெல்லியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு செல்வான். அங்கு பள்ளி முடிந்து வீடு திரும்பும் 7 முதல் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை சந்தித்து தெரிந்தவன் போல் பேச்சு கொடுப்பான். தன்னை சிறுமியின் தந்தை அனுப்பி வைத்ததாகவும், துணிகள் பொருட்கள் வாங்கி கொடுத்ததாகவும் கூறி ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் செல்வான்.

பாலியல் கொடுமை
அங்கு சிறுமிகளை மிரட்டியும் அடித்து உதைத்தும் பாலியல் பலாத்காரம் செய்து விரட்டி விடுவான். இதுபோல் சிறுமிகளை குறிவைத்து பாலியல் கொடுமை செய்து வந்தான். திருமணத்துக்கு முன்பும், திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்தான். வெளிப் பார்வைக்கு நல்லவன் போல் வேலைக்கு சென்று வந்தான்.

கையும் களவுமாக ...
கடந்த 2004-ம் ஆண்டு கிழக்கு டெல்லியில் வசித்த போது பக்கத்து வீட்டு சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டான். உடனே பெற்றோர் அவனை கையும் களவுமாக பிடித்து அடித்து உதைத்தனர். அதன்பிறகும் அந்தப் பகுதியில் சுற்றி வந்தான். இதற்கிடையே கடந்த 10-ந் தேதி 2 பெற்றோர் பள்ளியில் படிக்கும் தங்களது மகள்கள் மர்ம நபரால் கடத்தி கொடுமைப்படுத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்தனர். இதுபோல் ஏற்கனவே சிறுமிகள் கடத்தல், பாலியல் கொடுமைகளும் நடந்து வந்தன. அவை அனைத்தும் ஒன்று போல் இருந்தன. எனவே ஒரே நபர் தான் இந்த செயலில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ரஸ்தோகி கைது
காம கொடூரன் பற்றி கிழக்கு டெல்லி பகுதியில் போலீசார் விசாரித்தபோது டெய்லர் ரஸ்தோகி பக்கத்து வீட்டு சிறுமியிடம் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. அவனைப் பிடித்து விசாரித்தபோது சிறுமிகளிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டான். சிறுமிகள் கடத்தப்பட்ட பள்ளிகள், பொது இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் ரஸ்தோகி உருவம் பதிவாகி இருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் காமகொடூரன் ரஸ்தோகி கைது செய்யப்பட்டான். அவன் கடந்த 14 ஆண்டாக இதுபோன்ற பாலியல் கொடுமையில் ஈடுபட்டதாகவும் 100-க்கும் மேற்பட்ட சிறுமிகளை கொடுமைப்படுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago