முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் பாய்ஸ்டவுனில் வெளிநாட்டினர் கலந்து கொண்ட பொங்கல் விழா: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்:

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.. திருமங்கலம் பாய்ஸ்டவுனில் வெளிநாட்டினர் கலந்து கொண்ட பாரம்பரிய பொங்கல் விழாவில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பாய்ஸ்டவுன் பொங்கல் விழா: திருமங்கலம் அருகே பாய்ஸ்டவுன் சொசைட்டி எனும் தொண்டு நிறுவனம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோஹோமன் என்பவரால் துவக்கப்பட்டு சிறப்புடன் தற்போது நடைபெற்று வருகிறது.நான்கு மாவட்டங்களில் 10கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த பாய்ஸ்டவுன் தொண்டு நிறுவனத்தில் 12ஆயிரம் மாணவ,மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இத்தகைய சிறப்புடைய திருமங்கலம் பாய்ஸ்டவுனில் தமிழர்களின் பாரம்பரிய முறையில் பொங்கல்விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவிற்கு பாய்ஸ்டவுன் குழந்தைகள் பாராளுமன்ற சபாநாயகர் ஜெ.சர்மிளா தலைமை வகித்தார்.தலைமை பொது காரியதரிசி டாக்டர். பி.என்.நாராயணராஜா முன்னிலை வகித்தார்.பொருளாளர் பி.ஜி.அழகர்சாமி வரவேற்று பேசினார்.இவ்விழாவில் ஜோஹோமன் சாரிட்டி தலைவர் பீட்டர்சர்ச்,பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பாய்ஸ்டவுன் ஆதரவாளர் தெய்ரிமெய்யர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி உரையாற்றினார்கள். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு: ஏராளமான வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த பொங்கல் விழாவில் தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாய்ஸ்டவுன் நிறுவன செய்திமடலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்

.பின்னர் பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு கலை நிகழச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பாய்ஸ்டவுன் மாணவ,மாணவியருக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.இதை தொடர்ந்த பாய்ஸ்டவுன் வளாகத்தில் 2.5கோடி மதிப்பீட்டில் பான்யன் என்ற பெயரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான பள்ளிக் கட்டிட வளாகத்தின் கல்வெட்டினை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்து கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளை வெளிநாட்டினர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார்.

கலந்து கொண்டவர்கள்: இவ்விழாவில் முன்னாள் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் எம்.ஜெயராமன்,முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்செல்வம்,திருப்பதி,தமிழ்ச்செல்வம்,முன்னாள் திருமங்கலம் தொகுதி செயலாளர் ஆண்டிச்சாமி,திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,முன்னாள் கள்ளிக்குடி யூனியன் சேர்மன் மகாலிங்கம்,முன்னாள் திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் பாண்டியன்,கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளர் ராமசாமி,பேரையூர் செயலாளர் நெடுமாறன்,கல்லுப்பட்டி செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன்,சுகுமார்,செல்வம்,பழனி, சிவா,சிவன்காளை,கப்பலூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பரமசிவம்,முன்னாள் உரப்பனூர் பஞ்சாயத்து தலைவர் சாமிநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago