முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதித்திட்டம் : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி   - குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ராணுவ உடைகளில் 7 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவலால் டெல்லி விமான நிலையம் உட்பட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

7 தீவிரவாதிகள் ஊடுருவல் :

குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம் சக்ரி மற்றும்  குருதாஸ்பூர்  சோதனைச்சாவடி பகுதியில், ராணுவ உடைகளில் 7 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் விமானம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, டெல்லி விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் தீவிரமாக சோதனையிடப்படுகின்றன. விமானப் பயணத்திற்கு முன்னதாக பயணிகளிடம் கடுமையான சோதனை நடத்தப்படுகிறது. உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழில் பாதுகாப்பு படை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்