எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - ஐல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வை மத்திய அரசு காண வலியுறுத்தியும்,பீட்டா அமைப்பை தடைசெய்யக் கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் நீடிக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டு அறவழியில் தங்கள் உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
பீட்டா அமைப்புக்கு தடை :
தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்- தமிழர்களின் கலாச்சாரத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், ஆயிரக்கணக்கான மாணவ-மாணவியரும், இளைஞர்களும் தன்னெழுச்சியுடன் பங்கேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பி அறவழியில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். தஞ்சை, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் சென்னை மெரினாவில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். மாணாக்கர்கள், இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பெண்கள், வர்த்தகர்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். ஐல்லிக்கட்டின் மீதான தடையை நிரந்தரமாக நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதற்கு ஏற்றவாறு உரிய சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் பீட்டா அமைப்பை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் என்று கோரி வருகின்றனர். இதனிடையே, வெயில் கடுமையாக உள்ளதால், போராட்டக் களத்திற்கு குழந்தைகளை அழைத்து வரவேண்டாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் போராட்டம்:
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வுகாண வலியுறுத்தியும், பீட்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் அறவழிப்போராட்டம் மற்றும் அமைதிப் பேரணி உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாணவ - மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரயில் மறியல்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, மதுரை ரயில் நிலையத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இளைஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதேபோல், தமுக்கம் மைதானத்தில் திரளாக குவிந்த இளைஞர்கள், பெண்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கொட்டும் மழையில் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். பீட்டா அமைப்புக்கு எதிரான பதாகைகளை ஏந்தி, கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
பெண்களும் முழக்கம் :
ஜல்லிக்கட்டுக்கு நிரந்த தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பீட்டா அமைப்பை தடை விதிக்க வலியுறுத்தி மாணவர்கள், பெண்களும் முழக்கம் எழுப்பினர். மேலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக அவசர சட்டம் இயற்றிய தமிழக அரசுக்கு போராட்டக்காரர்கள் நன்றி தெரிவித்தனர்.
மீனவர்கள் ஆதரவு :
தூத்துக்குடி மாவட்டத்தில் 5வது நாளாகஇளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கு ஆதரவாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தேனி மாவட்டம் கூடலூரில் ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு உடனடி சட்ட திருத்தம் கொண்டு வரக் கோரி, விவசாயிகள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனுமதி கிடைக்கும் வரை தங்களின் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தமிழகத்தில் தொடர்ந்து நடத்த, மத்திய அரசு நிரந்த தீர்வு காண வேண்டும் எனக் கோரி திருவாரூரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு, பகலாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அஞ்சல் துறை ஊழியர்கள் போராட்டம் :
நாகை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அஞ்சல் துறை ஊழியர்கள் பீட்டா அமைப்புக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். மேலும் பீட்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்தில் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 5வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக வர்த்தகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
நெல்லை - குமரயில் போராட்டம் :
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்துக்கு ஆதரவாக சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில், உள்ள விசைப்படகு மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மேலும் இளைஞர்களுக்கு ஆதரவாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்பை இந்தியாவில் இருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். திருப்பூரில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் 5-ஆவது நாளாக கல்லூரி 10 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொட்டும் மழையில் ...
ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து கிருஷ்ணகிரி உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிகட்டை விரைந்து நடத்த மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். தஞ்சை தபால் நிலையம் முன்பு கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் 5வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கொட்டும் மழையை பொருட்படுத்தாத போராட்டக்காரர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என சூளுரைத்தனர். ஈரோடு வ.உ.சி மைதானத்தில் 4வது நாளாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்கக் கோரி புதுச்சேரி மாநிலத்தில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பீட்டா அமைப்புக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பினர். இதேபோல், கொக்கு பூங்கா அருகே மாட்டுவண்டி தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர்.
மதுரையி்ல் இன்று ஜல்லிக்கட்டு :
மதுரையில் அலங்காநல்லூர் , பாலமேடு, அவனியாபுரம், ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும். என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று ஜல்லிக்கட்டு நடப்பது உறுதியாகிவிட்டது. வாடிவாசல் திறந்ததும் மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் வீடு வாசலுக்கு திரும்புவதும் உறுதியாகிவிட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Apr 2024புது டெல்லி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளை விவிபேட் சீட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுளள்து.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை