முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரக்கோணத்தில் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      வேலூர்
Image Unavailable

அரக்கோணம்:    100வது எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு   அரக்கோணம் 15வார்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. இது குறித்து விவரம் வருமாறு.   வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரில் 15வது வட்டம் சார்பில் எம்ஜிஆரின் 100வது பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பிற்பகல் வேளையில் அரசு மருத்துவமனைக்கு அருகில் அன்னதானம் வழங்க ஏற்பா: செய்யப்;பட்டது. இந்த நிகழு;விற்கு வட்ட செயலாளர் வி.கோவிந்தராஜ் தலைமை பொறுப்பேற்றார். பொதுக்குழ உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி முதலியார் முன்னிலை வகித்தார்.  விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அஇஅதிமுக மருத்துவரணி மாநில துணை செயலாளர் மருத்துவர் எஸ்.பன்னீர்செல்வம், நகர கழக செயலாளர் துரைகுப்புசாமி ஆகிய இருவர் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார்கள். வட்ட செயலாளர்கள் எம்.செல்வம், ஈ.மாணிக்கவேலு, பொன்.பார்த்தீபன், எலக்டரிகல் குமார், உட்பட கே.பாஸ்கரன், பிரபாகரன், ரமேஷ், கபூர்பாய், ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்