முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமையலர் காலி பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      ஈரோடு

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் விடுதியில் காலியாக உள்ள சமையலர் பணிக்கு விண்ணப்பிக்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இயங்கி வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில், 14 ஆண், எட்டு பெண் சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நேர்காணல் மூலம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும் முன் அனுபவத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கடந்த, 2016 ஜூலை, 1ம் தேதியன்று, 18 வயது முதல், 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஈரோடு மாவட்டத்தில் வசிக்க வேண்டும். வரும், பிப்ரவரி, 3க்குள் மாலை, 300 மணிக்குள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் வரும் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட மாட்டாது. நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும். தகுதியானவர்கள் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள, ஈரோடு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்