எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர் - விருதுநகர் மாவட்டம், சூலக்கரை ஆயுதப்படையினர் குடியிருப்பு வளாக மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்க மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம். வருகை தந்தபோது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மு.ராசராசன்,இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துக்குமரன் மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் வரவேற்றனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம்;. தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் காவல் துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டு, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும், 58 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காவல் பதக்கங்களை அணிவித்தும் பாராட்டுச் சான்றிதழை வழங்கியும், இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர், முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வருடாந்திர பராமரிப்பு மானியத்தினையும், இராமசாமியாபுரம், துலுக்கபட்டி மற்றும் அயன்நத்தம்பட்டி ஆகிய ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவியினையும், 3 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.24 ஆயிரம் மதிப்பில் காதொலி கருவிகளையும், வேளாண்மைத்துறையின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.4 ஆயிரத்து 75 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், 3 நபர்களுக்கு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ஊட்டி டீ அதிகளவில் விற்பனை செய்தமைக்காக தலா ரூ.3 ஆயிரம் மதிப்பில் ரூ.9 ஆயிரம் ஊக்கத்தொகையினையும், பாராட்டுச்சான்றிதழ்களையும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய 3 நபர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பில் ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகையினையும், பாராட்டுச்சான்றிதழ்களையும், மாநில அளவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற 3 நபர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும், அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 66 அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 25 காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆக மொத்தம் 113 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 17 லட்சத்து 17 ஆயிரத்து 075 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
பின்னர், சிவகாசி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் கேந்திரியா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, சாட்சியாபுரம் வாய்பேசாதோர் மற்றும் காதுகேளாதோர் பள்ளி, இராஜபாளையம் ஏ.கே.டி.ஆர். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேவர்ஸ்காலனி நகராட்சி உயர்நிலைப்பள்ளி, பெரியவள்ளிகுளம் நோபல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் கே.வி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகளில் முதலிடம் பிடித்த இராஜபாளையம் ஏ.கே.டி.ஆர். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இரண்டாம் இடம் பிடித்த பெரியவள்ளிகுளம் நோபல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மூன்றாம் இடம் பிடித்த விருதுநகர் கே.வி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு பரிசுகளையும், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளிகளுக்கும் நினைவு பரிசினை மாவட்ட ஆட்சித்தலைவர் .சிவஞானம் வழங்கினார். குடியரசுதின விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராசராசன்;,இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சி.முத்துக்குமரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஆ.பூமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெயஅருள்பதி, காவல் துணை கண்காணிப்பாளர்கள், அரசுதுறை உயர் அலுவலர்கள், காவல்துறை அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.