முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      ஈரோடு

பவானியை அடுத்த மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்  நடைபெற்றது.

குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். ஈரோடு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பெ.சாந்தி வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஊராட்சிச் செயலர் ஆர்.தேவகி வாசித்தார்.

இக்கூட்டத்தில், கிராமப்புறங்களில் 100 சதவீதம் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நிலையை எட்ட வீடுகள்தோறும் கழிப்பறைகள் அமைத்து, அதைப் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குடிநீர், தார்சாலை மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது.  இக்கூட்டத்தில், மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வி.திருநாவுக்கரசு, துணை இயக்குநர் ரமேஷ்குமார், எலவமலை கூட்டுறவுக் கட்டட சங்கத் தலைவர் எஸ்.மகேஸ்வரன், ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்