எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் கைளத்தூர் மற்றும் பெருமத்தூர் ஆகிய பகுதிகளில் ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களையும், முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமையும், ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவை திட்டத்தையும் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைக்கும் நிகழ்ச்சிகள் நேற்று (28.1.2017) நடைபெற்றது.
புதிய கட்டிடம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கைகளத்தூரில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு நிதிஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் அதற்காக புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. தற்போது தற்காலிகமான கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து கைளத்தூர் அரசுமேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் பார்வையிட்டு பொதுமக்களிடம் மருத்துவமுகாம் பயனுள்ள வகையில் அமைந்துள்ளதா என்றும் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து வேப்பூர் வட்டம் பெருமத்தூர் கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவை திட்டத்தையும்; துவக்கிவைத்து, முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமினை அமைச்சர் பார்வையிட்டார்.
இந்நிகழ்வுகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:முன்னாள் தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க, இந்த முன்னோடி திட்டத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் தொடங்கி வைப்பதில் மிக்க மகிழ்ச்சி. அதிலும் குறிப்பாக மிகவும் பின்தங்கிய வட்டாராமாக கருதப்படும் வேப்பூரில் ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவையை தொடங்கி வைப்பதன் மூலம் சாதாரண குடிமகனுக்கும் அரசின் சுகாதாரத்திட்ங்கள் சென்றடையும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.
முன்னாள் தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட பல்வேறு சுகாதாரத்திட்டங்களால் தமிழகம் சுகாதாரதத்துறையில் பெற்றுள்ள முன்னேற்றம் குறித்தும், இதன் மூலமாக பொதுமக்களுக்கு கிடைத்துள்ள சுகாதார வசதிகள் குறித்தும், இதன் மூலமாக சுகாதாரத்துறை பெற்ற பல்வேறு விருதுகள் குறித்தும் மேதகு தமிழக ஆளுநர் தற்போது நடைபெற்று வரும் சட்டன்றக் கூட்டத்தொடரின் துவக்கநாள் நிகழ்ச்சியில் சட்டமன்றத்தில் விரிவாக எடுத்துரைத்தார்கள்.
பச்சிளங்குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முழு அக்கறை கொண்ட தமிழக அரசு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அம்மா பரிசுப்பெட்டகத்தை வழங்கி வருகின்றது. டாக்டர் முத்து லெட்சுமிரெட்டி மகப்பேறுத்திட்டத்தின் கீழ் கர்பினித்தாய்மார்களுக்கு உடல்நலத்தை பேணிக்காக்கும் வகையில் ரூ.12,000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ரூ.60 லட்சம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கைகளத்தூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க ரூ.60 லட்சம் நிதிஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையில் கையெழுத்திட்டவர் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா தான். சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே முன்னோடி மாவட்டமாக தமிழகம் விளங்கி வருகின்றது. பறவைக்காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை முழுமையாக கட்டுப்படுத்தி அனைவருக்கும் முழுமையான சுகாதாரத்தை தமிழக அரசு வழங்கி வருகின்றது.
கிராமப்புறங்களில் உள்ள மக்களின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றது. மேலும், மக்களைத்தேடி மருத்துவ சேவை என்ற உன்னத நோக்கத்தில் நடமாடும் மருத்துவக்குழுக்களும் செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாட்டில் 8,806 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. அனைத்து சுகாதார நிலையங்களிலும் தலா ஒரு கிராம சுகாதார செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதலாக ஒரு கிராம சுகாதார செவிலியரை நியமிக்க வேண்டும் என்ற நோக்கில் பரீட்சார்த்;த முறையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாரத்திற்குட்பட்ட பெருமத்தூர் துணை சுகாதார நிலையத்தில் இரண்டு கிராம சுகாதார செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டம் தமிழ்நாட்டில் பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முறையே வேப்பூர், விராலிமலை மற்றும் சூளகிரி ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கம் ஒரு செவிலியர் துணை சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும், மற்றொரு செவிலியர் கிராமப்பகுதியில் உள்ள அனைத்துப்பகுதிகளுக்கும் நேரடியாக சென்று மக்களுக்குத்தேவையான அடிப்படை மருத்துவ சேவைகளை வழங்க வேண்டும் என்பதுவேயாகும்.
இவ்வாறு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் தேசிய ஊரக சுகாதாரத்திட்ட இயக்குநர் தரேஸ் அஹமது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் க.நந்தகுமார். பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பி.மருதைராஜா(பெரம்பலுர்), மா.சந்திரகாசி(சிதம்பரம்), சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன்(பெரம்பலூர்), ஆர்.டி.இராமச்சந்திரன்(குன்னம்), பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர்; மரு.சம்பத் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.