முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடுதல் வகுப்பறை கட்டிடங்களின் கட்டுமான பணிகள்:

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

 திருமங்கலம்.-மதுரை மாவட்டம்,திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள அச்சம்பட்டி,அம்மாபட்டி ஆகிய கிராமங்களில் சிறப்புடன் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.4.61கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களின் கட்டுமான பணிகளை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்:

தமிழகத்தில் கல்வித்தரத்தை மேம்படுத்திடும் வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் கிராமப்புற மேல்நிலைப் பள்ளிகளுக்கு  கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டிட மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அச்சம்பட்டி மற்றும் அம்மாபட்டி ஆகிய கிராமங்களில் சிறப்புடன் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டிட அனுமதி பெற்றுத் தந்திடுமாறு அப்பகுதி மக்கள் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேற்கொண்ட முயற்சியின் பலனாக திருமங்கலம் ஒன்றியம் அச்சம்பட்டி மற்றும் அம்மாபட்டி கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ,மாணவியர் பயன் பெற்றிடும் வகையில் ரூ.4.61கோடி மதிப்பீட்டில் புதிதாக கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டிட மறைந்த தமிழக முதல்வர் அம்மா உத்தரவிட்டிருந்தார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு:

இதையடுத்து மாணவ,மாணவியரின் நலனுக்காக திருமங்கலம் ஒன்றியம் அச்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.55கோடியிலும்,அம்மாபட்டி அரசு மேல்;நிலைப்பள்ளியில் ரூ.2.06கோடியிலும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.இந்த கட்டுமான பணிகளை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தற்போது பூச்சு வேலைகள் நடைபெற்று வரும் நிலையில்  குறிப்பிட்ட காலத்திற்குள் தரமான முறையில் கட்டுமான பணிகளை முடித்து கொடுத்திடுமாறு அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

கலந்துகொண்டோர்:

இந்த ஆய்வின் போது முன்னாள் மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஜெயராமன்,முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்செல்வம்,திருப்பதி,சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஜான்மகேந்திரன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் வக்கீல்.அன்பழகன்,ஒன்றிய அம்மா பேரவை தலைவர்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,ஒன்றிய துணை செயலாளர் சுகுமார்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,கள்ளிக்குடி முன்னாள் துணை சேர்மன் கண்ணன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரபுசங்கர்,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் எஸ்.பி.எஸ்ராஜா,கட்சி நிர்வாகிகள்  சிவன்காளை,சாமிநாதன், வேல்முருகன், பாண்டியன்,செல்வம்,கோடீஸ்வரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்