முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானலில் விருது பெற்ற பள்ளிக்கு பாராட்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

கொடைக்கானல்-- தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற கொடைக்கானல் பேத்துப்பாறை ஒன்றிய ஆரம்பப்பள்ளிக்கு பாராட்டு விழா நடந்தது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை சார்பில் 2015-16ம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான விருது கொடைக்கானல் தாலுகா வில்பட்டி கிராமம், பேத்துப்பாறை ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வழங்கப்பட்டது. இந்த விருது பெற்ற பள்ளியையும் அதன் ஆசிரியர்களையும் பாராட்டும் விதமாக பாராட்டு விழா நடந்தது. முன்னாள் மாணவர்கள் சார்பில் நடந்த விழாவிற்கு டாக்டர் சுரோ~; தலைமை தாங்கினார், கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், கொடைக்கானல் வழக்கறிஞர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியையும் பள்ளியின் ஆசிரிய ஆசிரியர்களை பாராட்டியும் சிறப்பு விருந்தினர்கள், இந்த பகுதியின் பொதுமக்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பேசினர்.பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இந்த விழாவில் கொடைக்கானல் ஸ்மைல் அசோசியேசன் தலைவர் அப்பாஸ், ஆசிக் அக்தர் ,கே.வி.எம். நண்பர்கள் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்