எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணுகாரம்பட்டி மற்றும் அகரம் ஆகிய இடங்களில அரசு நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியதை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நேற்று (29.01.2017) திறந்து வைத்து தெரிவித்ததாவது :- தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 66 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு ரூ. 8432.96 இலட்சம் மதிப்பிலான பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டு தற்போது பள்ளிகள் செயல்பாட்டிலும், இதில் 3 பள்ளிகளுக்கான கட்டடப் பணிகள் நிறைவு பெற்று தயார் நிலையிலும், 11 கட்டப் பணிகள் நிறைவு பெறும் நிலையிலும், 31 பள்ளிகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 10 அரசு பள்ளிகள் நிதி பெற்றவுடன் கட்டுமானப் பணிகள் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும், அதேபோல் காரிமங்கலம் மற்றும் பென்னாகரம் பகுதிகளில் தரம் உயர்த்தப்பட்ட 3 மாதிரிப்பள்ளிகள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து கட்டிடங்கள் திறப்பதற்கு அரசால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாலக்கோடு மாதிரிப் பள்ளி கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. ரூ. 705 லட்சம் மதிப்பிலான 3 மகளிர் விடுதிகள் கட்டடங்கள் கட்டப்பட்டு தற்போது விடுதிகள் செயல்பாட்டில் உள்ளது. 84 கூடுதல் வகுப்பறைகள் ரூ.706 இலட்சம் மதிப்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டு தற்போது வகுப்பறைகள் செயல்பாட்டில் உள்ளது. மேலும் 27 ஆய்வக கட்டிடங்கள் ரூ. 230.31 இலட்சம் மதிப்பில் கட்டிடங்கள் கட்டப்பட்டு தற்போது ஆய்வகங்கள் செயல்பாட்டிலும், 34 கழிவறை வசதிகள் மாணவ, மாணவியர்கள் ரூ. 34.00 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது எனவும், 26 குடிநீர் வசதிகள் ரூ. 13.00 லட்சம் மதிப்பில் குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டில் உள்ளன. 2016-2017ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கண்ணுகாரம்பட்டி மற்றும் அகரம் அரசு உயர்நிலைப் பள்ளிகளாகும். மேலும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ரூ. 2 கோடியே 40 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துவக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாகவும், நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகவும் மற்றும் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தி அனைத்து கிராமத்தில் உள்ள மாணவ, மாணவியர்கள் படிக்கின்ற சூழலை உருவாக்கி தந்தவர் மறைந்த தமிழக முதல்வர் அம்மா தான். ஆற்றில் தண்ணீர் வந்தால் அகரம் - மாரண்டஅள்ளிக்கு போக முடியாமல் இருந்த சூழலை மாற்றி தற்போது அகரத்திலேயே ரூ. 5 கோடி மதிப்பில் பாலம் எற்படுத்தப்பட்டுள்ளது. இதை மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பள்ளிக் கல்வித்துறைக்கென்று தனி கவனம் செலுத்தி அனைத்து ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழக முதலமைச்சர் அம்மாவின் அரசு செயல்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கென்று ரூ. 24,130 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணி, பாலக்கோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி. அரங்கநாதன், தருமபுரி மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர் எம். பழனிசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 18 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 19 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
மேற்குவங்க மாநில டி.ஜி.பி. மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி : மேற்கு வங்க டி.ஜி.பி. ராஜீவ்குமார் மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.
-
காமி விமர்சனம்
18 Mar 2024நாயகன் விஷ்வக் சென்னின் தேகம் மீது மனிதர்கள் லேசாக தொட்டால் கூட அவருக்கு மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு ஏற்படுவதோடு, உடலில் மாற்றம் ஏற்பட்டு சுயநினைவின்றி சில மணி நேர
-
காடுவெட்டி விமர்சனம்
18 Mar 2024கதையின் நாயகன் ஆர்.கே.சுரேஷ், ”பெண்ணை தொட்டா வந்து நிற்பேண்டா...” என்று சொல்லிக்கொண்டு அடிதடியில் ஈடுபடுகிறார், ஊர் மக்களுக்கு உதவி செய்கிறார், காதல் தொல்லை கொடுக்கும்
-
ரோமியோ இசை வெளியீடு
18 Mar 2024அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ரோமியோ’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார்.
-
காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் துவக்கம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் நேற்று துவங்கியது.
-
அ.தி.மு.க. சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
மதுபான கொள்கை வழக்கில் கைது: சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி : மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
வரும் 21-ம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவலையும் வெளியிட வேண்டும்: எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான எஸ்.பி.ஐ.
-
திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டி
18 Mar 2024சென்னை : ம.தி.மு.க. சார்பில் திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி உறுதியானது?
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கூட்டணி உறுதியானதாகவும், நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.