முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி: கலெக்டர் பழனிசாமி. தலைமையில் ஏற்பு

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2017      திருச்சி
Image Unavailable

அண்ணல் காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று (30.1.2017) நாடு முழுவதும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தியாகிகள் நினைவாக தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தலைமையில் நடைபெற்றது.

 

மவுன அஞ்சலி

 

மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர், மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும், பணியாளர்களும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

இந்திய அரசியலமைப்பினால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன், குடிமகள் ஆகிய நான் நமது அரசியலமைப்பின்படி, தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பினால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன். இவ்வாறு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர்கள் அபிராமி(பொது), பாலகணே~;(வளர்ச்சி), சாந்தி(வேளாண்மை), மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இளங்கோ, மாவட்ட வழங்கல் அலுவலர் வேலுமணி, மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்