முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி மாணவர்களுக்கு கபாடி போட்டி

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -திண்டுக்கல் ஸ்ரீரமணாஸ் ஏ.பி.சி. பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான குடியரசு தினவிழா 4ம் ஆண்டு கபாடி போட்டிகள் நடைபெற்றது.

மாவட்டம் முழுவதிலும் இருந்து 24 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பழனி குருவப்பா மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. அந்த பள்ளிக்கு சுழற்கோப்பையும், ரூ.7 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. 2ம் இடத்தை பழனி நகரவை மேல்நிலைப்பள்ளிபெற்றது. அந்தப் பள்ளிக்கு கோப்பையுடன் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. 3ம் இடத்தை வேம்பார்பட்டி அரசு பள்ளி பிடித்தது. அந்த பள்ளி அணிக்கு ரூ.3 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. சிறப்பு பரிசாக திண்டுக்கல் டட்லி பள்ளி அணிக்கு ரூ.2 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் மணிவண்ணன் தலைமை வகித்தார். விரிவுரையாளர் விஷ்ணு சக்கரவர்த்தி வரவேற்புரையாற்றினார். நிர்வாக அலுவலர் திருப்பதி சிறப்புரையாற்றினார். கல்லூரி இயந்திரவியல் துறைத்தலைவர் ரகுநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகையினை வழங்கினார். நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயராமமூர்த்தி, நடராஜன், ஜெகன், தர்மராஜ் ஆகியோர் செயல்பட்டனர். நிறைவில் உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் ராஜா நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்