எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், சந்திராபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் திரு கே. விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது. இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய் துறையின் மூலம் இலவச வீட்டுமனைப்பட்டா 90 பயனாளிகளுக்கும், பட்டா மாறுதல் 6 பயனாளிகளுக்கும், இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியம் 15 நபர்களுக்கும், ளுவு ஜாதி சான்றிதழ் 56 பயனாளிக்கும், புதிய குடும்ப அட்டை 50 பயனாளிகளுக்கும், தற்காலிக ஓய்வூதியம் (வipள) 3 பயனாளிகளுக்கும், வேளாண்மைத் துறையின் சார்பில் இடுபொருள் மற்றும் விதைகள் 9 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் இடுபொருள் மற்றும் விதைகள் 5 பயனாளிகளுக்கும் என மொத்தம் 234 பயனாளிகளுக்கு ரூ. 63 இலட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் அவர்கள் தெரிவித்ததாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் ஒருங்கே இணைந்து மாதந்தோறும் கிராமங்களைத் தேர்வு செய்து மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் முன்மாதிரி கிராமமாக 10 கிராமங்களை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில் அரூர் வட்டம், சந்திராபுரம் கிராமம் ஒன்றாகும். இக்கிராமத்தில் பல்வேறு துறையின் மூலமாக முன்னுரிமை அடிப்படையில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். மேலும் இம்முகாம்களில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை வேளாண்மை பொறியியல் துறை, மருத்துவ சுகாதாரத்துறை, புதுவாழ்வுத் திட்டம் என அரசின் பல துறைகளின் சார்பில் திட்டங்கள் குறித்த பதாகைகளை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான வசதிகளை கேட்டறிந்தனார்கள். வனத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக கோணி (ஆலளழசயளெளை) என்கிற புதிய வகை மரக்கன்றுகளை வழங்கினார். இம்மரவகையில் மரக்கூழ், பழச்சாறுகள் மற்றும் மரவேலைகள் தயாரிக்க பயன்படுகிறது. விவசாயிகள் இம்மரக்கன்றுகளை நல்ல முறையில் பராமரித்து பயன்பெற வேண்டும். மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஜாதி சான்று, வருமானம் சான்று, இருப்பிடச்சான்றிதழ் பெற அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களிலும் விண்ணப்பித்துக்கொள்ளலாம் எனவும், பொதுமக்களுக்கு ஏதேனும் விவரங்கள் அறிய வேண்டுமெனில் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் 1077, 1800 425 7016, 1800 425 1071 மற்றும் வாட்ஸ் அப் எண். 8903891077 ஆகிய எண்களின் மூலமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மற்றும் புகார்களையும் கூறலாம். மேலும் அம்மா கைபேசி எண். 1100 எண்ணின் மூலமாக தங்களது குறைகளையும் மற்றும் கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என கலெக்டர்கே.விவேகானந்தன், தெரிவித்தார். இம்முகாமில் அரூர் கோட்டாட்சியர் கவிதா, அரூர் வன அலுவலர் செல்வி. எஸ். செண்பகப்ரியா, தனித்துணையாட்சியர் (ச.பா.தி) குப்புசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. சண்முகசுந்தரம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் இலாஹிஜான், தோட்டக்கலை துணை இயக்குநர் அண்ணாமலை, மாவட்ட தாட்கோ மேலாளர் வைத்தியநாதன் உட்பட துறை ரீதியான அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 13 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 18-03-2024.
18 Mar 2024 -
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.