முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருள்மிகு ஆதிசக்தி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேகம்

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள பட்டிவீரன்பட்டியில் மருதாநதி கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிசக்தி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. பட்டிவீரன்பட்டியில் உள்ள ஆதிசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (செவ்வாய் கிழமை) காலை விநாயகர் அனுக்கை, கிராம தேவதை அனுக்கை, வாஸ்து சாந்தி பூஜை மற்றும் கும்பஅலங்காரம்

நடைபெற்றது. அன்று மாலை யாக சாலையில் விக்னேஷ்வர பூஜை, தன்வந்திரி ஹோமங்களுடன் இரண்டாம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை யந்திர பிரதிஷ்டை அண்ணாமலையார் மற்றும் நவகிரக மூர்த்திகள் அஷ்டபந்தன மருந்து சாற்றி விரதிஷ்டை நடைபெற்றது.லட்சுமி ஹோமத்தை தொடர்ந்து நாடி சந்தனம், தீபாராதனையும் நடைபெற்றது. திருக்கோவில் விமானம் கலசத்திற்கு மற்றும் மூலவர் விநாயகப்பெருமாள், அண்ணாமலையார், உண்ணாமலையம்மாள், நவகிரகங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை கந்தப்ப ஆதினம் திருநாவுகரசு குருக்கள், முரளிகுருக்கள் நடத்திவைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவைச் சேர்ந்த இந்துநாடார்கள் உறவின்முறை பரிபாலன சங்க தலைவர் அசோக்பாபு, துணைத்தலைவர் மோகன்குமார்,செயலர் தீனதயாளமூர்த்தி மற்றும் சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்