எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி திருமங்கலம் ஒன்றியம் பள்ளக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணுவவீரர் சுந்தரபாண்டி மற்றும் கள்ளிக்குடி ஒன்றியம் கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு ராணுவவீரர் தாமோதரகண்ணன் ஆகியோர் மரணமடைந்ததை தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் தலா ரூ.20லட்சம் நிவாரண நிதியை தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் வழங்கி ஆறுதல் கூறினார்.
ராணுவவீரர் சுந்தரபாண்டி மரணம்;: திருமங்கலம் அருகேயுள்ள பள்ளக்காபட்டியைச் சேர்ந்த சின்னச்சாமி-தமிழச்செல்வி தம்பதியரின் மகன் சுந்தரபாண்டி(25).விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டி ராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்காக பல்வேறு தியாகங்கள் செய்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார்.இவருக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணமாகி சிவபிரியா என்ற மனைவி உள்ளார்.சிவபிரியா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்நிலையில் சில நாட்களாக ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 25ம் தேதி பந்திப்போரா மாவட்டம்,குரெஸ் செக்டாரில் ராணுவ முகாம் இருந்த பகுதியில் கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது.இந்த பனிச்சரிவில் ராணுவவீரர்கள் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். இந்த பனிச்சரிவில் சிக்கி திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராணுவவீரர் சுந்தரபாண்டியின் சடலமும் இருந்ததை மீட்புபடையினர் கண்டுபிடித்து மீட்டனர். ராணுவவீரர் தாமோதரகண்ணன் மரணம்: இதனிடையே மீட்பு படையினர் மோப்பநாய்கள் உதவியுடன் தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் பனிச்சரிவில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 5ராணுவ வீரர்hகளை மீட்டு அருகிலுள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.எனினும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5ராணுவவீரர்களும் உயிரிழந்தனர்.
இதில் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம்-காட்டுராணி ஆகியோரது மகனான தாமோதரகண்ணன்(26) என்பவர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.டிப்ளமோ பட்டதாரியான தாமோதரகண்ணன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இராணுவத்தில் சேர்ந்ததும் தற்போது காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகில் உள்ள ராணுவமுகாமில் பீரங்கிபடையில் வீரராக பணியாற்றி வந்துள்ளார்.தற்போது பனிச்சரிவில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவரது சகோரார் ஹரீஷ்குமார் என்பவர் தற்போது இந்திய ராணுவத்தில் வீரராக பணியாற்றி வருகின்றார். தலா 20லட்சம் நிவாரணநிதி அறிவிப்பு: திருமங்கலம் அருகேயுள்ள பள்ளக்காபட்டியைச் சேர்ந்த ராணுவவீரர் சுந்தரபாண்டிமற்றும் கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு ராணுவவீரர் சுந்தரபாண்டி ஆகிய இருவர் பணிச்சரிவில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்ததை தொடர்ந்து இவ்விரு கிராமங்களும் சோகத்தில் மூழ்கின.மேலும் உடல்கள் வீட்டிற்கு கொண்டு வரப்படும் வரையில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்,கூட்டமாக திரண்டிருந்த கிராமமக்கள் கதறியழுத காட்சி பார்ப்போரை கண்கலங்க வைப்பதாக இருந்தது.
இந்நிலையில் உயிரிழந்த ராணுவவீரர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்;பில் நிவாரண நிதியாக தலா.ரூ.20லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். விமானம் மூலம் உடல்கள் மதுரை வருகை: இந்நிலையில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவவீரர்களின் உடல்கள் விமானம் மூலம் நேற்று முன்தினம் இரவு 11மணிக்கு தனிவிமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ராணுவீரர்கள் அணிவகுப்புடன் பெட்டிகளில் வைத்து கொண்டு வரப்பட்ட ராணுவவீரர்களின் உடல்களுக்கு பழைய விமானநிலையம் முன்பாக மரியாதை செலுத்திடும் நிகழச்சி நடைபெற்றது.அப்போது தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்;, மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ்,மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.,மாவட்ட எஸ்.பி.(பொ)சக்திவேல் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து வணங்கிமரியாதை செலுத்தினார்கள்.இதையடுத்து ராணுவ வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு ராணுவத்தினர் புடைசூழ கொண்டு செல்லப்பட்டது. நிவாரணநிதி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்: இந்நிலையில் பள்ளக்காபட்டி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட ராணுவவீரர் சுந்தரபாண்டியின் உடலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் சுந்தரபாண்டியின் பெற்றோர் சின்னச்சாமி-தமிழச்செல்வி மற்றும் மனைவி சிவபிரியா ஆகியோரிடம் தமிழக அரசின் சார்பில் நிவாரணநிதியாக ரூ.20லட்சத்திற்காக காசோலையை அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் வழங்கி ஆறுதல் கூறினார்.பின்னர் கே.வெள்ளாகுளத்தில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு ராணுவவீரர் தாமோதரகண்ணனின் உடலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,கலெக்டர் கொ.வீரரகவராவ் ஆகியோர் மலர்வளையம் வைத்த அஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் மரணமடைந்த தாமோதரகண்ணனின் பெற்றோர் மாணிக்கம்-காட்டுராணி ஆகியோரிடம் தமிழக அரசின் சார்பில் நிவாரண நிதியாக ரூ.20லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி ஆறுதல் கூறினார்.
21குண்டுகள் முழங்க இறுதிச்சடங்குகள்: இதனிடையே நேற்று காலை பள்ளக்காபட்டி சுடுகாட்டில் ராணுவவீரர் சுந்தரபாண்டியன் உடலுக்கு 21துப்பாக்கி குண்டுகள் முழங்கிட இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் நடைபெற்றது.அப்போது பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்து சுந்ரபாண்டிக்கு இறுதியஞ்சலி செலுத்தினார்கள்.பின்னர் கே.வெள்ளாகுளம் சுடுகாட்டில் ராணுவவீரர் தாமோதரகண்ணனின் உடலுக்கு 21குண்டுகள் முழங்கிட இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் நடைபெற்றது.அப்போது சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அஞ்சலி நிகழ்சிகளில் கலந்து கொண்டோர்: மதுரை கலெக்டர் கொ.வீரராகவராவ்,வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.,முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ஜெயராமன்,மாவட்ட கழக துணை செயலாளர் பி.அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி செயலாளர்கள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி, திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன்,திருமங்கலம் ஒன்றிய அம்மா பேரவை தலைவர்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் சாத்தங்குடி தமிழழகன்,முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் ரமேஷ்,திருப்பரங்குன்றம் ஒன்றிய துணை செயலாளர் நிலையூர்முருகன்,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன்,சாமிநாதன்,வேல்முருகன்,சிவன்காளை,பிரபுசங்கர்,கண்ணன்,தாத்தப்பன்,பாண்டியன்,அன்னக்கொடி,சுகுமார்,நிரஞ்சன்,சிவா,உசிலம்பட்டி ஆர்.டி.ஓ சுகன்யா, திருமங்கலம் தாசில்தார் மலர்விழி,துணை தாசில்தார் தனபாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகள்,அரசுஅலுவலர்கள் ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ