முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுகவை எந்த தீயசக்தியாலும் நெருங்கிவிட முடியாது:அமைச்சர் சேவூர்.எஸ்.இராமச்சந்திரன் பேச்சு

புதன்கிழமை, 1 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் கட்டமைக்கபட்ட அஇஅதிமுகவை எந்த தீய சக்தியாலும் நெருங்கவிட முடியாது, அவர்கள் விட்டு சென்ற பணியை சாதி, மதங்களுக்கு அப்பற்பட்டு சசிகலா  சிறப்பாக செயலாற்றி வருகிறார் என அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சேவூர்.எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்த திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் போளுர்; அடுத்த குண்ணத்தூர் கூட்ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத்தலைவர் ஜெமினி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தூசி.கே.மோகன், கலசபாக்கம் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.பின்னர் தி.மலை வடக்கு மாவட்ட ஜெ,பேரவை செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது,பேரறிஞர் அண்ணா மறைவுக்கு பின்னர் அவரது பெயரையும், கொள்கைகளையும் திமுக தலைமை இருட்டடிப்புச் செய்ததால், அண்ணாவின் வழியில், திராவிட கொள்கையோடு பேரறிஞர் வழியில் வந்த எம்.ஜி.ஆர் 1972ம்ஆண்டு அண்ணாவின் பெயரியலேய அதிமுகவை உருவாக்கினார்.எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் அவர் வழியில் வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா அதிமுகவை காப்பாற்றி பேரறிஞரும், எம்.ஜி.ஆர் விட்டு சென்ற பணியை ஏற்று இன்று தேசியளவில் 3வது பெரிய கட்சியாக அதிமுகவை உருவாக்கி பொது வாழ்க்கைக்கு என்று இருக்கின்ற இலக்கணத்தை கடைபிடித்து கோடிகணக்கான அதிமுக தொண்டர்களை காப்பாற்றியவர் ஜெ, மேலும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் ஆகியோர் கண்ட கனவுகளை, மக்கள் நல பணிகளை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் யாரலும் சிந்தித்து பார்க்க முடியாத பல வரலாற்று திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தையும், அதிமுகவையும் உலகரங்கில் தலைநிமிர்த்தியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.இப்படி தமிழக மக்களின் நலனுக்காகவே தன்னுடைய பொது வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்ட மறைந்த ஜெயலலிதாவின் வழியில் அவரின் நிழலாக கடந்த 33ஆண்டுகளாக வாழ்ந்து வந்த சசிகலா, அதிமுகவின் கோடிகணக்கான தொண்டர்களுக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காக கட்சி பொறுப்பை ஏற்று சாதி, மதங்களை கடந்து நின்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை சிறப்பாக செயலாற்றி வருகிறார்.இந்த நல்ல சூழலையும், நடைபெற்று வரும் அதிமுக நல்லாட்சியின் மீது சில தீய சக்திகள் உள்ளே புகுந்து எதாவது இடையூறுகளை ஏற்படுத்த முடியுமா, தமிழக மக்களின் மத்திலேயே சட்டம் ஓழங்கை சீர்குலைக்க முடியுமா, தவறான தகவல்களை வெளிப்படத்த முடியுமா என கங்கணம் கட்டிகொண்டு இருப்பவர்கள் யாராக இருந்தாலும் எம்.ஜி.ஆர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கட்டமைத்த அதிமுகவை நெருங்கவிட முடியாது என்பதை உறுதிபடுத்தும் விதத்தில் கட்சி பணியையும், மக்கள் நலப்பணிகளை செயலாற்றிட வேண்டும் என அமைச்சர் சேவூர்.எஸ்.இராமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்