முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2017      தூத்துக்குடி
Image Unavailable

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் - பூவனநாத சுவாமி திருக்கோவில் வருஷாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி – அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சங்கு பூஜை, கலச பூஜைகளும் நடைபெற்றது. இதையெடுத்து புனித நீர் மங்கள வாத்தியங்களுடன் கோவில் வளாகத்தினை 3 முறை சுற்றி வந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதன் பின்பு அனைத்து கோபுர கலசங்களும் அலங்கார தீபாரதனை நடைபெற்று கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் மூலவருக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜான்சிராணிசங்கரபாண்டியன், முன்னாள் அறக்காவலர் குழு தலைவர் நாகஜோதி,முன்னாள் உறுப்பினர் திருப்பதிராஜா,மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஸ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்