முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரறிஞர் அண்ணா நினைவுநாளை முன்னிட்டு பக்தர்களுக்கு இலவச வேட்டி சேலை

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,- ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னி்ட்டு  திருக்கோயில் நிர்வாகம் சார்பாக திருக்கல்யாணம் மண்டபத்தில் பக்தர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி பொது விருந்து நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
   பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் வெள்ளிக் கிழமை காலையில் ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜையும்,தீபாராதணையும் நடைபெற்றது.அதன் பின்னர் தொடர்ந்து திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் பொது விருந்து நிகழ்ச்சியும்,பக்தர்களுக்கு இலவச வேட்டி,சேலைகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு  திருக்கோயில் தக்கார் குமரன் சேதுபதி, திருக்கோயிலின் இணை ஆணையர் செல்வராஜ், ஆகியோர்கள் தலைமை வகித்தனர்.ராமேசுவரம் முன்னாள் நகர் மன்ற முன்னாள் தலைவர் அர்ச்சுனன்,ராமேசுவரம் அதிமுக நகர் செயலாளர் பெருமாள், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு இலவசமாக வேட்டி சேலைகளை திருக்கோயில் தக்கார் குமரன் சேதுபதி வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.பொதுவிருந்து  நிகழச்சியில்  கண்காணிப்பாளர்கள் ககாரீன்ராஜ்,  ராஜாங்கம்,பா லசுப்பிர மணியன்,மற்றும் இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, செல்லம்,கலை ச்செல் வம்,கண்ணன், அலுவலர்கள் மாரியப்பன்,பழனிமுருகன்,ஆன்மிக வாதிகளும்,அனைத்து கட்சி நிர்வாகிகளும்,சமுகஆர்வாளர்களும், பக்தர்க  ளும்,எராளமானோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்