முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுப்பாளையம் ஒன்றிய பகுதியில்797 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் பன்னீர்செல்வம் எம்எல்ஏ வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் நேற்று நடந்த விழாவில் 797 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ வழங்கினார். புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இவ்விழாவுக்கு வந்த அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியர் சு.பாண்டியன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வி.கௌரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவுக்கு தலைமையேற்று சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ 425 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த விழாவில் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பனைஓலைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெ.ஸ்ரீதர் நன்றி கூறினார். இதேபோல புதுப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதுப்பாளையம் மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இறையூர் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி, அம்மாபாளையம் அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலசபாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு 472 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இந்த விழாவில் மாவட்ட கழக துணைச் செயலாளர் எல்.என்.துரை, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.கோவிந்தராஜ், காஞ்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் சங்க தலைவர் ஏ.கே.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, தலைமை ஆசிரியர் செந்தில்நாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்