முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா நினைவு நாள் தி.மலை அண்ணாமலையார் கோவிலில்பொதுவிருந்து: கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை
Image Unavailable

திருவண்ணாமல:அண்ணாவின் 48வது நினைவு நாளையட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கலந்து கொண்டார். தமிழகம் முழுவதும் நேற்று அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரது சிலைக்கும், உருவ படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கலந்து கொண்டு முதியோர்களுக்கு விலையில்லா சேலைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.பொன்னி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு, கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, தாசில்தார் சி.பன்னீர்செல்வம், கோவில் இணை ஆணையர் சி.ஹரிபிரியா உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில் அண்ணாவின் நினைவு நாளையட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ கலந்து கொண்டு முதியோர்களுக்கு விலையில்லா சேலைகளை வழங்கினார். கோவில் செயல் அலுவலர் கே.பெரியமருது பாண்டியன், அதிமுக மாவட்ட கழக துணைச் செயலாளர் எல்.என்.துரை, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்