முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டம், அவினாசி லிங்கேஸ்;வரர் திருக்கோவிலில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி கலந்து கொண்டார்

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      கோவை
Image Unavailable

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், அவினாசி அருள்மிகு லிங்கேஸ்;வரர்  திருக்கோவிலில்    பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு  நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி கலந்து கொண்டார்.

மறைந்த பேரறிஞர் அண்ணா அவர்களின்  நினைவு நாளையொட்டி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள  அருள்மிகு வாழைத்தோட்;டத்து அய்யன் திருக்கோவில், திருப்பூரில் உள்ள விஸ்வேஸ்வரசுவாமி வீரராகவப் பெருமாள் கோவில், சிவன்மலை முருகன் கோவில், பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோவில் உள்ளிட்ட  17 திருக்கோவில்களில் பொது மக்கள் கலந்து கொள்ளும் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி இன்று (03.02.2017) நடைபெற்றது. மேலும், அவிநாசியில் உள்ள அவினாசி அருள்மிகு லிங்கேஸ்;வரர்  திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி,   கலந்து கொண்டு பொது மக்களுடன் அமர்ந்து சமபந்தி விருந்தில் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வின்போது, இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் ஹர்சினி, அவிநாசி வட்டாட்சியர் அருணா, கூட்டுறவு சங்கத்தலைவர் சுப்பிரமணியம், உள்ளிட்ட ஏராளமான பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்