எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில். பாரத தேசத்தின் தென்திசையில் காவிரி பாய்ந்தோடும் ஈசான பாகத்தில் அமைந்திருக்கும் கண்ணனூர் என்னும் சமயபுரத்தில் வீற்றிருக்கும் ஆயிரம் கண்ணுடையாள் என்று அழைக்கப்படும் அருள்மிகு மாரியம்மன், கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கி வருகிறாள். வேண்டுவோர்க்கு வேண்டுவன அருள்பாலித்து கருணை மழை பொழிந்து பூவின் மணமாகவும் பழத்தின் சுவையாகவும் கருணை கடலாகவும் யாவராலும் துதித்து தீராத நோய்களையும் தீவினைகளையும் தீர்த்து அருளும் கருணை உள்ள கொண்டு திகழ்ந்து வருகிறாள். தேவீ மஹாத்மியத்தில் 'சைவகாலே மஹா காளி மஹாமாரி ஸ்வரூபையா" என்று சொன்னவாறு பிரபஞ்சத்தை தோற்றுவித்து ரட்சித்து லயப்படுத்திக் கொண்டுள்ளாள். இந்த பராசக்தியே மாராசூரனை சம்ஹரிக்க மஹாமாரி வடிவம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இப்படி வேண்டுவோர்க்கு வேண்டிய வரும் தரும் சக்தி வாய்ந்த தளமாக உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிமல் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். சபரி மலை, பழனி, வேளாங்கன்னி, மேல்மருவத்தூர், திருப்பதி போன்ற ஆலயங்களுக்கு சுற்றுலா செல்வோர் இங்கும் வந்து செல்கின்றனர். மேலும் கருர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கிளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் மஞ்கள் உடையணிந்து மாரியம்மனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து வேப்பிலை கையிலேந்தி பாதயாத்திரையாக வருகின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் பூச்சொறிதல் விழா, சித்திரை மாதம் தேரோட்டம் உள்ளிட்ட விழாக்கள் மிக சிறப்பாக நடைபெறும்.
பங்குனி மாதம் பிறந்தவுடன் ஒவ்வொரு திங்கள் கிழமையும் பூச்சொறிதல் விழா நடைபெறும் அப்போது பல மாவட்டங்களில் இருந்தும் அம்மனை பூக்களால் அலங்கரித்து மேள தாளம், வாணவேடிக்கை, பாரம்பரிய தப்பாட்டம், குறவன் குறத்தி ஆட்டத்துடன் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வருவர். 5வாரம் பூச்சொறிதல் விழா முடிந்து சித்திரை பிறந்து முதல் செவ்வாய் கிழமை சித்திரை தேரோட்டம் நடப்பது வழக்கம். தேரோட்ட காலத்தில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி, அக்னி சட்டி, பால்குடம் எடுத்து மேள தாளத்துடன் சென்று அம்மனை வழிபடுவர். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாக வந்து இரவு கோவில் வளாகத்தில் தங்கி அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றால் நினைத்த காரியங்கள் கை கூடும் என்பது நம்பிக்கை. எனவே அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்களின் வசதிக்காக நாமக்கல், பெரம்பலூர், துறையூர், திருச்சி ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்;துகள் இயக்கப்பட்டு வருகிறது. அம்மை போன்ற தீராத நோய்களால் பாதித்தவர்கள் இங்கு வந்து தங்கி சென்றால் பூரண குணமாகும் என்பது ஐதீகம். எனவே பலர் வந்து தங்கி செல்கின்றனர்.ம எனவே சமயபுரம் எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
இப்படி சிறப்பு வாய்ந்த சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கடந்த 2004ஆம் ஆண்டு கும்பாபிசேகம் நடைபெற்றது. சம்பிராதாயப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிN~கம் நடத்தப்படவேண்டும். அதன்படி சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன. அரசு ஒதுக்கிய நிதி மற்றும் நன்கொடையாளர்கள் கொடுத்த நிதி உதவியுடன் பலகோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் இருந்து வந்த கோவில் வளாகம் தற்போது நன்கொடையாளர்களால் கிரயம் பெற்று ஒப்படைக்கப்பட்ட சுமார் 22 ஏக்கர் நில பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்டு அங்கு முடி மண்டபம், குளியல் வசதிகள் உள்பட பல்வேறு கட்டமைப்புகள் மிகவும் பிரமாண்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக அங்கிருந்த பெருவளை வாய்க்காலையே அப்புறப்படுத்தி திருப்பி விடப்பட்டுள்ளது.
கோவிலின் கிழக்கு பகுதியில் 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகிறது. மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டுள் ளன. கோவில் திருப்பணி வேலைகள் தொடர்ந்து நடந்து வருவதாலும், பாலாலயம் நடந்து 6 மாதங்கள் முடிந்து விட்டதாலும் பக்தர்களின் வழிபாட்டு நலன் கருதி கோவில் கும்பாபிசேகத்தை விரைவில் முடிக்க வேண்டும் என எழுந்த கோரிக்கையின் விளைவாக வரும் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி கும்பாபிசேகம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. எனவே கிழக்கு வாசல் ராஜகோபுரம் தவிர மற்ற கோபுரங்கள், மூலஸ்தான விமானம மற்றும் அனைத்து சன்னதி விமானங்களுக்கும் வருகிற 6ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கும்பாபிN~கம் நடைபெறுகிறது.
இதற்காக யாகசாலை பூஜைகள் 3ஆம் தேதி தொடங்கியது. கும்பாபிசேகத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு, அடிப்படை வசதிக்காக மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி உத்தரவின் படி சமயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் குமரன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பல்வேறு வசதிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக 4 இடங்களில் தற்காலிக பஸ்நிலையம் அமைக்கும் பணி, வாகனங்கள் நிறுத்துமிடம், கழிவறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிசேக விழா ஏற்பாடுகளை இணைஆணையர் தென்னரசு தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.