எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டம், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி சூரமங்கலத்தில் அரசு மிகப்பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர்கள் விடுதி திறப்பு விழா மற்றும் சார்நிலை கருவூல கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவில் பொதுப்பணிகள் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இவ்விழா கலெக்டர்வா.சம்பத்,இ.ஆ.ப., தலைமையும், நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் , சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் ஜி.வெங்கடாசலம், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும், அடிக்கல் நாட்டியும் பேசியதாவது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். அந்த வகையில் இன்றை தினம் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி, போடிநாயக்கன்பட்டியில் தமிழக அரசின் மிக பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர்கள் விடுதிக்கு புதிய விடுதி கட்டடம் கட்டும் பணிக்காக ரூ.1.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனடிப்படையில் விடுதிக் கட்டடம் கட்டும் பணியானது முடிக்கப்பட்டு, இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாணவியர்கள் நல்லமுறையில் படித்து, மேலும் உயர்கல்விக்கு செல்ல ஏதுவாக அனைத்து வசதிகளுடன் இவ்விடுதி கட்டித்தரப்பட்டுள்ளது. மேலும், புரட்சித்தலைவி அம்மாவின் அரசு பொதுமக்களின் தேவைகளை அறிந்து சூரமங்கலம் பகுதியில் ரூ.66.55 லட்சம் மதிப்பிலான சார்நிலை கருவூல கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த சார்நிலை கருவூல கட்டிடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டிடம் கட்டுவதற்கான பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய திட்டங்கள் மூலம் பள்ளி மணவ, மாணவியர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி, பாடபுத்தகம், திறமை வாய்ந்த ஆசிரியர்கள், பள்ளி கட்டிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாணவ, மாணவியர்களின் கல்வி கற்க ஏதுவாக ஏற்படுத்தியதன் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசுப்பள்ளியில் தேவையான அனைத்து வசதிகளுக்கும் உருவாக்கியதன் காரணத்தால் அரசு பொதுத்தேர்வுகளில் சேலம் மாவட்ட மாணவ, மாணவியர்கள் தமிழக அளவில் சாதனை படைத்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.மேலும், புரட்சித்தலைவி அம்மாவின் அரசு தமிழகத்திலேயே இல்லாத அளவிற்கு சேலம் மாவட்டத்திற்கென ரூ.340 கோடி மதிப்பில் நடைபெறும் உயர்மட்ட பாலப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை போக்க திருவாக்கவுண்டனூர் பைபாஸ், ஏ.வி.ஆர் ரவுண்டானா, ஐந்து ரோடு ஆகிய பகுதிகளில் ஆகிய பகுதியில் மிகப்பெரிய பாலம் மற்றும் ஸ்டில் பிளான்ட் பகுதிகளில் 145 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம், செவ்வாய்பேட்டை பகுதியில் உயர்மட்ட பாலம், முள்ளுவாடி கேட் பகுதியில் இரண்டு உயர்மட்ட பாலங்கள் என சேலம் மாநகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் எளிதாக பயணம் மேற்கொள்ளும் அளவிற்கு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இது போன்ற எண்ணற்ற பல திட்டங்களை அம்மாவின் அரசு தொடர்ந்து செயல்படுத்தி வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பொதுப்பணிகள் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி பேசினார். இவ்விழாவில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (க,ப) மு.சிவசாமி, வருவாய் கோட்டாட்சியர் சி.விஜய்பாபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் நெ.செல்வம், உதவி செயற்பொறியாளர் செந்தாமரை, வட்டாட்சியர் பெலிக்ஸ்ராஜா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.