முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரணி பகுதியில் 438 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா:அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      வேலூர்
Image Unavailable

ஆரணி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சனிக்கிழமை  நடைபெற்ற விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் 438 மாணவர்களுக்கு  அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.  ஆரணி அடுத்த முள்ளண்டிரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 99 மாணவர்களுக்கும்,ஆரணி சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 17 மாணவர்களுக்கும்,கண்ணமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 165 மாணவிகளுக்கும்,கண்ணமங்கலம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 157 மாணவர்களுக்கும் என மொத்தம் 438 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.  இதில் செய்யார் எம்எல்ஏ தூசி கே.மோகன், முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் க.சங்கர், பேரவை நிர்வாகி பாரிபாபு, பாசறை மாவட்டசெயலாளர்  ஜி.வி.கஜேந்திரன்,  முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் அ.கோவிந்தராசன், பாசறை நிர்வாகி பாபு, முன்னாள் மாவட்டகவுன்சிலர் ஜெ.சம்பத், போளூர் சி.ஏழுமலை,மாவட்டதுணைசெயலாளர் டி.கருணாகரன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலாளர் பாண்டியன், தலைமையாசிரியர்கள் ஐப்கான், ராஜேந்திரன், மாணிக்கவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்