முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரம்மபுரம் ஊராட்சியில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா:அரி எம்.பி வழங்கினார்

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியம், பிரம்மபுரம் ஊராட்சியில் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது இவ்விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பி.டி.புகழ்வேந்தன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் அமிலேஷன் அனைவரையும் வரவேற்று பேசினார். இவ்விழாவில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் என்.ஜி.பார்த்திபன், அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், கலந்துக் கொண்டார். தொடர்ந்து அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி விழாவில் சிறப்புரையாற்றியதாவது: மேல்நிலைப் பள்ளிகளுக்கு மாணவ மாணவியர்கள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில்  சென்று மேற்படிப்பை தொடர வேண்டியிருந்த நிலையில் மறைந்த முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மாணவ மாணவியரின் நலன் கருதி தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக இன்று இப்பள்ளியில் வழங்குகின்றோம். மேலும், இந்த திட்டத்தில் பயன்பெறும் மாணவ மாணவியர்கள் அனைவரும் எல்லா நலன்களையும் பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தி பேசினார். மேலும் இவ்விழாவில் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் கோரந்தாங்கல் எ.குமார், பி.எஸ்.என்.எல். ஆலோசனைக் குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கே.அப்பு, முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் நாராயணன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சந்தர்கணேஷ், பஞ்சாட்சரம், சேவூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் ராமமூர்த்தி, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க துணை தலைவர் பிரகாசம், அரங்காவலர் குழு தலைவர் கார்த்திகேயன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கோவிந்தராஜ், மார்கன், பாண்டியன், மதியழகன், நாகராஜன், சதீஷ்குமார் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்