முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடைகளை தகர்த்தி தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெறுவோம்: விஷால் அணி பேட்டி

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2017      சினிமா
Image Unavailable

சென்னை  - தடைகளை தகர்த்தி தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று விஷால் அணியினர் தெரிவித்துள்ளனர்.தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மீண்டும் சேர்க்கப்பட்ட விஷால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார். முன்னதாக விஷால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வருகிற மார்ச் 5-ந் தேதி தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் ஒரு அணி, கேயார் தலைமையில் ஒரு அணி, ஜே.கே.ரித்தீஷ் தலைமையில் ஒரு அணி, விஷால் தலைமையில் ஒரு அணி என நான்கு முனை போட்டிகள் நடைபெற உள்ளது. விஷால் சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்ததால், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பில் தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது விஷால் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தளர்த்தப்பட்டுள்ளதால் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதற்காக அவரது அணியினருடன் நேற்று மனுத்தாக்கல் செய்துள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் பொருளாளர் பதவிக்கும் ஞானவேல்ராஜா செயலாளர் பதவிக்கும் போட்டியிட உள்ளனர்.மனுதாக்கல் செய்த பிறகு விஷால் அளித்த பேட்டி,தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை 6 மாதத்தில் நிறைவேற்றுவோம் என்றார். இல்லையெனில் தங்களது பதவியை ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்வோம் என்றார். தனது வேட்புமனுவில் குறைகள் கண்டுபிடித்து என்னை போட்டியிட விடாமல் யாரும் முயற்சி செய்தால் அந்த தடைகளை தூள்தூளாக்குவேன் என்றும் விஷால் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்