முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்புத் துண்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2017      ஈரோடு

வரி இனங்கள் செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்படுவதுடன் ஜப்தி, நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக,நேற்று அவர்  வெளியிட்ட செய்தி:

ஈரோடு மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வீட்டு வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள், இதர வரி இனங்களை உடனடியாக மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் இணைப்புத் துண்டிப்பு செய்யப்படுவதுடன் ஜப்தி, நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாள்களில் அலுவலகத்தில் தொகை செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்