முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் வருஷாபிஷேகம் விழா: பக்தர்கள் சுவாமி தரிசனம்.

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து ஒரு ஆண்டு காலம்  நிறைவுயடைந்ததையொட்டி  செவ்வாய்க்கிழமை காலையில் வருஷாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 ராமேசுவரம்  ராமநாதசுவாமி திருக்கோயிலில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதி கிழக்குராஜகோபுரம், வடக்கு, தெற்கு, மேற்கு கோபுரங்கள் உள்பட அனைத்து விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் மகாகும்பாபிஷேகம்  நடைபெற்றது. இதனால் இந்து மரபுப்படி திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் முடிந்து ஒரு ஆண்டுக்கு பின் வருஷாபிஷேகம் நடத்துவது என்பது ஐதீகமாகும். அதன்பேரில் ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் முடிந்து கடந்த ஜனவரி 20 ஆம் தேதியோடு ஒரு ஆண்டு நிறைவு பெற்றது.இதனைதொடர்ந்து ஐதீகப்படி நேற்று காலையில் திருக்கோயிலில் வருஷாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியையொட்டி திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு அம்மன் சன்னதி முன்பு உள்ள  திருமண மண்டபத்தில் கலசங்களி புனித நீர் வைக்கப்பட்டு  கணபதி ஹோமத்துடன் சிறப்பு யாக சாலை பூஜைகள் முறையாக தொடங்கியது.இதனை தொடர்ந்து  நேற்று காலை 8 மணிக்கு 2-ஆம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. பூஜையை தொடர்ந்து திருக்கோயில் யானைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.பின்னர் தொடர்ந்து பசு மாட்டுக்கு ஹோமம் பூஜைகள் நடைபெற்றது.  பின்பு யாக பூஜையில் அம்மன் சன்னதி முன்பு மண்டபத்தில் புனித நீர் நிரப்பட்டு வைக்கப்பட்ட கலசங்களை திருக்கோயில் மூத்த குருக்கள் மேளா தாளத்துடன் எடுத்துக்கொண்டு திருக்கோயில் பிரகாரங்களை வளம் வந்து  கருவறை சன்னதிகளான ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன், காசி விசுவநாதர், விசாலாட்சி ஆகிய சன்னதிகளில் ஒரே நேரத்தில் புனிதநீரால் மகாஅபிஷேகம் நடைபெற்றது.பின்னர் ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகளும்,தீபாராதணையும்,நடைபெற்றது.இந்தபூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்து அருள்பெற்று சென்றனர்.இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் தக்கார் குமரன் சேதுபதி,திருக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன்,பேஷ்கார்கள்,கண்காணிப்பாளர்கள்,அலுவலர்கள் கலந்துகொண்டனர்.                     

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்