முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் 3 ம் இடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

  வத்தலக்குண்டு - திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி.மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 10&ஆம் வகுப்பு படிக்கும் அரிஹரசுதன், கிரிஷிஹேசன் ஆகிய இரண்டு மாணவர்கள் இம்மாதம் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 59&வது மாநில அளவிலான குடியரசு தின விழா குழு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர். இதில் 17&வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான இரட்டையர் இறகுபந்து போட்டியில் மாநில அளவில் 3&ஆம் இடம் பிடித்து வெற்றிபெற்றனர். இம்மாணவர்களையும் பயிற்சியளித்த ஆசிரியைகள் விஜயபாரதி, தீபா ஆகியோரையும் என்.எஸ்.வி.வி பள்ளிகளின் மேலாண்மை குழுத் தலைவர் அசோக்பாபு, இந்து நாடார்கள் உறவின்முறை சங்க செயலர் தீனதயாளமூர்த்தி, பள்ளித்தலைவர் கோபிநாத், செயலர் நிர்மல் மற்றும் பள்ளி முதல்வர் ஆத்தியப்பன் ஆகியோர் பாராட்டினார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்