முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வள்ளலார் தினத்தையொட்டி வரும் 9-ந் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      நீலகிரி

வள்ளலார் தினத்தையொட்டி வரும் 9_ந் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடைகளை திறப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு_

                          விற்பனை இல்லை

நீலகிரி மாவட்டத்தில் வள்ளலார் தினத்தையொட்டி வரும் 9_ந் தேதி தமிழ்நாடு மதுபான(உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 1989 ஆகியவற்றின்படி எப்.எல்.1 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்_2 கிளப்கள், எப்.எல்.3 பார் ஹோட்டல்கள், எப்.எல்.3ஏ தமிழ்நாடு ஓட்டல் யூனிட் 1 மற்றும் 2 ஆகியவற்றில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யக்கூடாது என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

               கடும் நடவடிக்கை

அன்றைய தினத்தில் கட்டாயமாக மதுபான சில்லறை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள் மற்றும் தமிழ்நாடு ஹோட்டல்களில் உள்ள பார்கள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் மேற்படி உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் சங்கர் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்