முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீஸ் பணியில் சேர விரும்பும் மாஜி ராணுவத்தினருக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      ஈரோடு

கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தில் இரண்டாம் நிலை காவலர் பணியிடத்திற்கு முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெற ராணுவ படைவீரர்களுக்கு மொத்த காலிப்பணியிடத்தில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணபத்துடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சான்றிதழை இணைத்தனுப்ப வேண்டும்.கடைசி தேதி

 இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசி தேதிக்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெற உள்ள ராணுவ படைவீரர்கள் விண்ணப்பத்துடன் தங்களது படை பிரிவு அலுவலரிடத்தில் உரிய படிவத்தில் சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட சான்றிதழை இணைக்க தவறினால் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது. மேலும் ராணுவ பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவு செய்யாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்விற்கான விண்ணப்பங்களை தலைமை தபால் நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிக்க வருகின்ற 22ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்