முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒளவையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2017      ஈரோடு

ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் விடுத்துள்ள செய்தி

  பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்தோரை ஊக்குவிக்கும் வகையில் 2016-2017 ஆம் ஆண்டில் உலக மகளிர் தின விழாவில், தமிழக அரசால் ஒளவையார்  விருது வழங்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒளவையார் விருது பெற விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் விருதுக்கான கருத்துருவை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் உடனடியாக சமர்ப்பிக்கலாம். ஒளவையார் விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள், தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்

மக்களுக்குத் தொண்டாற்றும்

. சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்குத் தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருபவராக இருக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் தகுதியான நபர்கள், மாவட்ட சமூகநல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், ஈரோடு என்றமுகவரியில் மேற்கண்ட செயல்பாடுகளுக்கான சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்