முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகையிலைஒழிப்பு பிரச்சாரபேரணி சோளிங்கர் மாணவர்கள்; பங்கேற்பு

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரத்தில் புகையிலை; ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சார பேரணி சோளிங்கர் ஸ்ரீதிவ்ய சைதன்யா மெட்ரிக் மேனிலைப் பள்ளி நிர்வாகத்தால்; நடத்தப்பட்டது. இந்த பிரச்சாரத்தில் அரக்கோணம் மருத்துவமனை இணைந்து கொண்டது. அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் நடந்த துவக்க நிகழ்விற்கு பள்ளி முதல்வர் நிர்மலா தலைமை தாங்கினார். அரக்கோணம் வருவாய் அய்வாளர் அருள்செல்வன், கிராம அதிகாரி (டவுன் பொறுப்பு) கிருஷ்ணன், முன்னிலை வகித்தனர். இராணிப்பேட்டை வருவாய் கோட்டாச்சியர் பா.முருகேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பள்ளி நிர்வாகி .வெங்கடேசன் பேரணியை வழி நடத்தி சென்றார். பேரணியில் பங்கேற்ற 118 பள்ளி மாணவர்கள் பீடி சிகரேட் பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை சுவாசிப்பதால் மட்டும் ஆண்டிற்கு ஆறு லட்சம் பேர் பலியாகிறார்கள். மேலும் பதினெட்டு வகையான இன்னல்களுக்கு மனிதன் தள்ளபட்டு பலி ஆவதாக கோஷம் எழுப்பியவாறு சென்றனர். பேரணி டிசிஆர் பெட்ரோல் பங்க், பழைய பேருந்து நிலையம் வழியாக அரசு மருத்துவமனைக்;கு வந்தடைந்தது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்