முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் பணியில் ஈடுபடாமல் முடங்கி கிடக்கும் முலாயம் சிங்

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ  - உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நேரத்தில் தற்போது முதல் முறையாக அவர் எந்த தேர்தல் பணியும் செய்யாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்.

மகனுடன் மோதல்
உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவுக்கும், அவரது மகனும், முதல்வருமான அகிலேஷ்யாதவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அகிலேஷ் யாதவ் கட்சியை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தார். வேட்பாளரை அவரே தேர்வு செய்து அறிவித்தார்.

கடந்த 25 ஆண்டுகளில்...
முதலில் இதற்கு முயலாம்சிங் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் மவுனமாகிவிட்டார். கட்சி பணிகள் அனைத்தையும் அகிலேஷ் யாதவ் தான் கவனித்து வருகிறார். உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் காலத்தில் முலாயம்சிங் யாதவ் பம்பரமாக மாநிலம் முழுவதும் சுற்றிவந்து பிரசாரம் செய்வது வழக்கம். எந்த நேரமும் ஹெலிகாப்டரில் பறந்தபடி இருப்பார். கடந்த 25 ஆண்டுகளாக நடந்த சட்டசபை தேர்தகளில் இப்படித்தான் பணியாற்றி வந்தார்.

வெறிச்சோடிய வீடு
ஆனால் இப்போது தான் முதல் முறையாக அவர் எந்த தேர்தல் பணியும் செய்யாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். அவரது வீடு லக்னோவில் உள்ள வி.டி. மார்க் என்ற இடத்தில் உள்ளது. அந்த வீட்டிலே தான் எப்போதும் இருக்கிறார். அவரை சந்திப்பதற்கு கூட யாரும் வருவதில்லை. எப்போதாவது ஒன்றிரண்டு பேர் வருகிறார்கள். பொதுவாக தேர்தல் காலத்தில் முலாயம்சிங் யாதவ் வீட்டில் கூட்டம் அலைமோதும். இப்போது முற்றிலும் வெறிச்சோடி கிடக்கிறது.

பிரச்சாரம் செய்வாரா?
முலாயம்சிங் வீடு இருக்கும் இடம் அருகே தான் சமாஜ்வாடி கட்சியின் தலைமை அலுவலகமும் உள்ளது. ஆனால் அந்த அலுவலகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அப்படி இருந்தும் அருகில் உள்ள வீட்டில் இருக்கும் முலாயம்சிங்கை சந்திப்பதற்கு யாரும் செல்லாமல் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. கட்சி பணிகள் தொடர்பாக அனைவருமே அகிலேஷ்யாதவை மட்டும் தான் சந்தித்து பேசுகிறார்கள். முலாயம்சிங் யாதவ் பிரசாரம் செய்யப்போவதாக கூறியிருந்தார். வருகிற 11-ந்தேதி அங்கு முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை அவர் பிரசாரத்துக்கு செல்லவில்லை. இனிமேலும் அவர் பிரசாரத்துக்கு செல்வாரா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்