முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செம்மரம் வெட்ட சென்றதாக திருவண்ணாமலை தொழிலாளர்கள் 11 பேர் ஆந்திர போலீசாரால் கைது

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

திருப்பதி - கடப்பா அருகே செம்மரம் வெட்ட சென்றதாக தமிழக தொழிலாளர்கள் 11 பேரை ஆந்திர போலீசார் கைது செய்தனர்.

போலீசார் சந்தேகம்
ஆந்திர மாநிலம், கடப்பா அருகே நேற்று முன்தினம் செம்மரக்கடத்தல் சிறப்பு பிரிவை சேர்ந்த 2 போலீசார் பணிமுடிந்து கடப்பா அருகே உள்ள யர்லகுண்டாவுக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கமலாபுரம் பஸ் நிலையத்தில் 11 பேர் பஸ்சில் ஏறினர். அடுத்த சிறிது நேரத்தில் அவர்கள் செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்கள் என அறிந்த போலீசார், பஸ்சில் பயணம் செய்த அனைவரின் பைகளையும் சோதனையிட்டனர். அதில் மரம் வெட்டும் கருவிகளான கத்தி, கோடரி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது.

11 பேர் கைது
இதையடுத்து பயணிகளின் உதவியுடன் அவர்களை யர்லகுண்டாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 11 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட 11 பேரும் ஐவ்வாது மலையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago