முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமலைநாயக்கரின் 434 வது ஆண்டு பிறந்த தின கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 9 பெப்ரவரி 2017      தேனி
Image Unavailable

ஆண்டிபட்டி - தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திருமலைநாயக்கரின் 434வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே உள்ள உருவச்சிலைக்கு  தேனி மாவட்ட நாயுடு மகாஜன சங்க துணை தலைவர் நாகராஜ்,மாவட்ட துணை பொருளாலர் முருகேசன் ஆள் உயர மாலைஅணிவித்து  மரியாதை செய்தனர்.நிகழ்ச்சியில் நாயுடு மகாஜன சங்கத்தினர் இனிப்புகள் வழங்கியும்,பாட்டாசு வெடித்தும்,தேவர் ஆட்டம் ஆடியும் தம் மகிழ்ச்சியை வெளிப்படித்தினர்.

சென்ற ஆண்டு  தமிழக முன்னால் முதமைச்சர் ஜெயலலிதா திருமலைநாயக்கர் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்ததை முன்னிட்டு நாயுடு மகாஜன சங்கம்  சார்பில் மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்.இன்நிகழ்ச்சிகான ஏற்பாட்டினை ஆண்டிபட்டி ஒன்றிய இளைஞர் அணி செயளாலர் ரவிசந்திரன்,ஆண்டிபட்டி ஒன்றிய இளைஞர் அணி அமைப்பு செயளாலர் செந்தில்குமார்,பால செய்தனர். நாயுடு மகாஜன சங்க இளைஞர்கள் அம்மா வாழ்க,அம்மா வாழ்க என கோசம்யிட்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்