முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறு,குறு விவசாயி சான்று முகாம்:ஆயிரத்திற்கு மேறப்பட்டோர் பயன்

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      வேலூர்
Image Unavailable

அரக்கோணம் தாலுக்கா அலுவலகத்தில் சிறு, குறு விவசாயி சான்று வழங்கும் சிறப்பு முகாமில்;, ஆயிரத்திற்கும் மேற்;பட்ட விவசாய பெருமக்கள் குவிந்து பயடைந்தனர்; இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுக்கா அலுவலகத்தில் நேற்று காலை சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றுகள் உடனுக்குடன் வழங்கும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது மழை பொய்த்து போனதால் விவசாயிகளிடையே சொட்டுநீர் பாசனம், தெளிப்பான்நீர்; பாசன முறைகளை அதிக அளவில் புகுத்தி அதனை அதிகஅளவில் விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளும் நோக்கில் 100 சதவிகித மான்யமும் கிடைப்பதற்குறிய சிறு,குறு விவசாயி சான்று வழங்கும் முகாம் துவக்க விழா தாசில்தார் ஆ.குமரவேல் தலைமையில் நேற்று நடைபெற்றது. வேளாண்மை உதவி அலுவலர் அன்பரசு, மற்றும் உதவியாளர்கள் ஆர்.தென்னரசு, முரளி ஆகியோர் முன்னிலையில் துவங்கியது. இந்த பணிகளில் வருவாய் துறை ஆய்வாளர்கள் (தெற்கு) அருள்செல்வம், (வடக்கு) கணேசன், (பள்ளுர்) சாந்தி, (பாராஞ்சி) வித்யா, ஆகியோருடன் அனைத்து கிராம அலுவர்களும் இந்த பணிகளில் முழுமையாக (மாலை வரையில்; தொடர்ந்து) ஈடுபட்டனர். இம்முகாமில் பங்கேற்று மனு கொடுத்த அனைவருக்கும் சான்றுகளும் உடனுக்குடன் வழங்கபடுவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடைவார்கள் என தெரியவருகிறது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்