முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி மாணவ - மாணவிகளுக்கு தடகளப்போட்டிகள்:முதன்மை கல்வி அலுவலர் பரிசு, சான்றிதழ் வழங்கினார்

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ - மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான தடகளப்போட்டிகள் நேற்று நடந்தது. போட்டியை மதுரை மண்டல முதுநிலை மேலாளர் க.புகழேந்தி தொடங்கி வைத்தார். அனைவருக்கும் இடைநிலை கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கையுந்துப்பந்து பயிற்சியாளர் முனுசாமி வரவேற்றார்.போட்டியானது 6ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை, 9 முதல் 10&ம் வகுப்பு வரை, பிளஸ் 1 முதல் பிளஸ் 2 வரை என 3 பிரிவுகளாக 50 மீ, 100 மீ, நின்ற நிலையில் தாண்டுதல், டென்னிஸ் பந்து எறிதல், மென்பந்து எறிதல் ஆகிய போட்டிகள் நடந்தது. இதில் திருவண்ணாமலை, செய்யாறு கல்வி மாவட்டங்களில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்