முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் உள்ள சிவசுப்பிரமணியர் கோயில் தேரோட்ட திருவிழா:பெண்கள் மட்டும் பங்கேற்று தேரை இழுத்தனர்

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி குமாரசாமிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திற்கு மறுநாள் பெண்கள் மட்டும் பங்கேற்று தேரை இழுக்கும் தேர்த்திருவிழா நடத்தப்படும். இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் இங்கு வருவர். கடந்த4-ம் தேதி தைப்பூசத்தையொட்டி கொடியேற்று விழா நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. இன்று காலை 8 மணிக்கு, வள்ளி தெய்வாணை சமேதராய் சிவசுப்பிரமணியர் வீதி வலம் வரும் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். குமாரசாமிப்பேட்டை, நான்கு ரோடு வழியாக பென்னாகரம் ரோட்டில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. தேர்திருவிழாக்களில் அதிகப்படியான திருட்டு சம்பவங்கள் நடப்பதால் டிஎஸ்பி சோமசுந்தரம் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்