முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டி ஜெ.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரியில் பொங்கல் திருவிழா

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2017      நீலகிரி
Image Unavailable

ஊட்டி ஜெ.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரியில் பொங்கல் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ஊட்டி ரோக்லேண்ட் பகுதியில் அமைந்துள்ள ஜெ.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரியில் பி.பார்ம், எம்.பார்ம், பிஎச்.டி. பார்ம் டி படிப்புகள் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன. இக்கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநில மாணவ, மாணவியர்களும், வெளிநாட்டு மாணவ, மாணவியர்களும் பயின்று வருகின்றனர்.

இக்கல்லூரியில் பொங்கல் திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் டாக்டர் தனபால் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மாணவ, மாணவியர்கள் பொங்கல் வைத்து சாமிக்கு படையலிட்டும், தப்பட்டை இசையில் பாட்டுப்பாடியும், நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இவ்விழாவில் கல்லூரி நிர்வாக இயக்குநர் பசுவண்ணா, கண்காணிப்பாளர் ராஜண்ணா மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்